Wednesday, March 21, 2018

138 மாத வன்என் மணியினை

மாத வன்என் மணியினை
வலையில் பிழைத்த பன்றிபோல்
ஏது மொன்றும் கொளத்தாரா
ஈசன் றன்னைக் கண்டீரே
பீதக வாடை யுடைதாழப்
பெருங்கார் மேகக் கன்றேபோல்
வீதி யார வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

மாதவன் என் மணியினை - மாதவன் என் மணியினை

வலையில் பிழைத்த பன்றிபோல - வலையில் இருந்து தப்பி பிழைத்த பன்றி போல

ஏது ஒன்றும் கொளத்தாரா - ஏது ஒன்றும் நாம் கொள்ள, கைக்கு பிடி தராமல் செல்லும்

ஈசன் தன்னை கண்டீரே - இறைவனைக் கண்டீர்களா?

பீதக வாடை உடைதாழ - தனது மஞ்சள் பட்டாடை தாழ

பெருங்கார் மேகக் கன்றே போல் - பெரும் கார் மேகக் கன்றே போல் (கருமை நிற கன்றினைப் போல)

வீதியார வருவானை - வீதியில் நிறைந்து வருபவனை

விருந்தா வனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் கண்டோம்


 கேள்வி - மாதவன் என் மணியினை (மணி என மாதவனை கொஞ்சுகிறாள்), வலையில் இருந்து தப்பிப் பிழைத்த பன்றி போல (உடனேயே பன்றிக்கு ஒப்பிடுகிறாள்? ஆனாலும் பன்றி அவதாரமே எடுத்தவர்.ஆகவே நாம் தவறாக எடுக்கக் கூடாது )நமது கைப்பிடியிலிருந்து தப்பி ஓடியவர்..அவனைக் கண்டீர்களா?

பதில் - பெரும் கருமை நிறக் கன்று போல, மஞ்சள் பட்டாடை உடுத்தி, வீதியில் வலம் வந்துக் கொண்டிருந்தவனைக் கண்டோமே

No comments:

Post a Comment