Thursday, March 8, 2018

87- பைம்பொழில் வாழ் குயில்காள்

பைம்பொழில் வாழ்குயில்காள் மயில்காள் ஒண் கருவிலைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்காள்
ஐம்பெரும் பாதகர்காள் அணிமாலிருஞ் சோலைநின்ற
எம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே

பைம்பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கருவிளைகாள்- பசுமையான சோலையில் வாழும் குயிலினங்களே!மயில்களே!அழகிய கருவிளை மலர்களே!

வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்காள்-வாசனை மிகுந்த களங்கனிகளே! அழகிய வண்ணம் கொண்ட நஹ்றுமலர்களே!

ஐம்பெரும் பாதகர்காள் அணி மாலிருஞ் சோலை நின்ற-ஐம்பெரும் பாதகர்களே திருமாலிருஞ்சோலை நின்ற

எம்பெருமான் உடைய உங்களுக்கு எஞ்செய்வதே- எம்பெருமானின் நிறம் உங்களுக்கு ஏன்? (உங்களைப் பார்த்து பார்த்து, அவனை எண்ணி) என்னை வதைப்பதற்கா?


பசுமைமிக்க சோலையில் வாழும் குயில்களே,மயில்களே,அழகிய கருவிள (சங்குப்பூ) மலர்களே!வாசனை மிக்க களாம் பழங்களே! வண்ணம் கொண்ட நறுமணம் மிக்க காயமலர்களே! ஐம்பெரும் பாதகர்களே(மேற்கண்ட ஐந்தும் பாதகர்களாம்)உங்களுக்கு எதுக்கு எம்பெருமானின் நிறம்? அப்படியிருந்து கொண்டு என்னை, எல்லாவற்றிலும் அவரது நினைவையூட்டி வதைப்பதற்கா? (என் கிறாள்)


No comments:

Post a Comment