Saturday, March 3, 2018

69-போய்த் தீர்த்த மாடாதே நின்றபு ணர்மருதம்

போய்த்தீர்த்த மாடாதே நின்றபுணர்மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக்கு டிகொண்டு
சேய்த்தீர்த்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடைய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய்வ லம்புரியே

போய்த்தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம்-புண்ணிய நதிகளுக்குச் சென்று தீர்த்த்ம் ஆடாது,மருத மரமாக நின்றவர்களை
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக்கொண்டு-சாய்த்து,  (அவர்களின் சாபத்தைத் தீர்த்து) கைத்தலத்தில் குடிகொண்டு
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண்மால் தன்னுடைய-இளமையான வேர்க்கும் உடம்புடன் நின்றசெம்மையான திருமாலின்
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே-வாய்த்தீர்த்தம் உன் மீது (சங்கின் மீது) படும் அளவிற்கு பாய்ந்தாட வலம்புரி சங்கே

(குபேரனின் பிள்ளைகள் நளகுபாரன், மாணீக்ரவன் இருவரும் பெண்கள் நீராடும் இடத்தில் நிர்வாணமாய் குளித்ததால் மருத மரமாக சாபம் பெற்றவர்கள்.கண்ணன், குழ்ந்தையாய் மர்த மரத்தால் செய்யப்பட்ட உரலில் கட்டிப் போடப்பட்டான்.அதை உடைத்து, குபேரனின் பிள்ளைகளின் சாப விமோசனம் அடைய வைத்தவன் கண்ணன்) 

No comments:

Post a Comment