Friday, March 9, 2018

91- காலை யெழுந்திருந்து கரியகுருவிக் கணங்கள்

காலை யெழுந்திருந்து கரியகுருவிக் கணங்கள்
மாலின்  வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ
சோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான்
ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே

காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள்-காலை எழுந்திருந்து கரிச்சான் குஞ்சுக் குருவிக் கூட்டங்கள்

மாலின்  வரவுசொல்லி மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ-திருமால் வருவார் எனச் சொல்லி மயங்கிப்பாடுதல் உண்மையாக நடந்து விடுமோ

சோலை மலையப்பெருமான் துவராபதி எம் பெருமான்-திருமாலிருஞ்சோலை அழகர்மலைப் பெருமான்,துவாரகை எம் பெருமான்

ஆலிநிலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே-ஆல் இலையில் துயில் கொள்ளும் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதெ

கரிச்சான் குஞ்சுக் குருவிக் கூட்டங்கள் எல்லாம் திருமால் வருவார் என்று சொல்லி மயங்கிப் பாடுகின்றனவே அவை உண்மையாக நடந்துவிடுமா?
திருமாலிருஞ்சோலை மலைப் பெருமான், துவாரகையின் பெருமான் ஆல் இலையில் கண் வளரும் பெருமாள், அவன் வருவான் என்று அவனது செய்தியை சொல்கின்றனவே!
(இது நடக்குமா..அது நடக்குமா..என்றெல்லாம் கேட்பதன் மூலம் டஹ்ன் வேதனையைத் தெரிவிக்கிறாள்)

No comments:

Post a Comment