Monday, February 12, 2018

14- பெய்யுமா முகில் போல் வண்ணா...

பெய்யுமா முகில் போல்வண்ணா: உன்றன்
பேச்சும் செய்கையும், எங்களை
மையலேற்றி மயக்கவுன்முகம்
மாயமந்திரந் தாங்கொலோ,
நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை
நோவநாங்க ளுரைக்கிலோம்.
செய்யதாமரைக் கண்ணினாயெங்கள்
சிற்றில்வந்து சிதையலே

பெய்யுமாமுகில் போல் வண்ணா- மழைபொழிவதற்குமுன் இருக்கும் கருமேகம் போன்ற நிறத்தானே
உன் தன் பேச்சும் செய்கையும்- உனது பேச்சும், சொல்லும்
எங்களை மையலேற்றி மயக்க- எங்களை காதல் போதையேற்றி மயக்கவைக்க
உன் முகம் மாய மந்திரம்கொலோ-உன் முகம்தான் என்ன மாயமந்திரம் செய்ததோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு- உன்னை "நொய் நொய்" என நச்சரிக்கும் பிள்ளைகள் அல்ல நாங்கள்
செய்ய தாமரைக்கண்ணினா-தாமரைப் போன்ற கண்களை உடையவனே!
எங்கள் சிற்றில் வந்து சிதையலே-எங்கள் சிறு வீட்டை வந்து சிதைக்காதே

பெய்துவிடுமோ எனும் நிலையில் இருக்கும் மேகம் போன்ற கரும் நிறத்தானே! உன் பேச்சும், செய்கையும் எங்களை மையல் ஏற்றி மயக்க வைக்க, உன் முகம் என்ன மாயமந்திரம் செய்ததோ!உன்னை "நொய் நொய்" என நச்சரிக்கும் பிள்ளைகள் அல்ல நாங்கள்.உன் மனம் நோகுமாறு நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம்.ஆகவே..தாமரைப் போன்ற கண்ணினை உடையவனே! எங்களது சிறிய மண் வீட்டை வந்து சிதைக்காதே!

No comments:

Post a Comment