Saturday, February 17, 2018

23-எல்லே யீதென்ன இளமை

எல்லே யீதென்ன இளமை
எம்மனை மார்காணிலொட்டார்
பொல்லாங்கீ தென்று கருதாய்
பூங்குருந் தேறி யிருத்தி
வில்லாலி லங்கை யழித்தாய்நீ
வேண்டிய தெல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமேபோவோம்
பட்டைப் பணித்தருளாயே

எல்லே இது என்ன இளமை- ஏலே! இது என்ன சிறுபிள்ளத்தனம்
எம்மனைமார் காணில் ஒட்டார்-எங்கள் வீட்டு மக்கள் இதைப் பார்த்தால் இங்கே விடமாட்டார்கள்
பொல்லாங்கு இதுவென்று கருதாய்-இது போக்கிரித்தனம் என்று ஏன் எண்ண மறுக்கிறாய்
பூங்குருந்து ஏறி இருத்தி- குருந்த மரம் ஏறி உட்கார்ந்து இருப்பவனே!
வில்லால் இலங்கை அழித்தாய்-வில்லினால் இலங்கையை அழித்தாய்.
நீ வேண்டியது எல்லாம் தருவோம்- நீ கேட்டது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம்-யாரும் பார்க்கும்முன்  வீ  ட்டிற்குப் போய்விடுவோம்
பட்டைப் பணித்தருளாயே- எங்கள் பட்டாடைகளைத் தந்து அருள்வாயாக

இது என்ன சிறுபிள்ளைத்தனமான செயல்.என் வீட்டு மக்கள் பார்த்தால், மீண்டும் எங்களை இங்கே வர விடமாட்டார்கள்.நீ செய்யும் செயல் போக்கிரித்தனமனது என் நீ உணரவில்லையா?குருந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து இருப்பவ னே!வில்லால் இலங்கையை அழைத்தவனே!நீ கேட்டது எல்லாம் தருவோம்.எங்கள் பட்டாடைகளைத் தந்து அருள்வாயாக! யாரும் பார்க்கும் முன் எங்கள் வீடு செல்ல அருள்வாயாக(என் கிறார்)

No comments:

Post a Comment