Thursday, February 22, 2018

38-ஆவலன்புட யார்தம் மனத்தன்றி

ஆவலன்புட யார்தம் மனத்தன்றி
மேவ லன்வரை  சூழ்துவ ராபதிக்
காவ லங்கன்று மேய்த்து விளையாடும்
கோவ லன்வரில் கூடிடு கூடலே

ஆவலும் அன்பும் உடையார்தம் மனத்தன்றி-ஆவலும், அன்பும் உடையவர்கள் மனத்திலன்றி
மேவலன்- மேவு செய்யாதவன் (வேறு எங்கும் இல்லாதவன்)
விரைசூழ் துவாராபதிக் கோவலன்-கன்றுமேய்த்து விளையாடும் ஆயர் குலத் தலைவன்
வரில் கூடிடு கூடலே=வருவார் எனில் கூடிடு கூடலே

கண்ணன் தன் மீது அன்புடையாரிடம் ஆவலுடன் மனத்தில் இருப்பான்.அவனுக்கு தங்குமிடம் அதுவே! கன்று மேய்த்து விளையாடும் ஆயர் குலத்தலைவன் என்னிடம் வருவானெனில் கூடிடு கூடலே

No comments:

Post a Comment