Tuesday, February 13, 2018

17- பேதநன்கறி வார்களோடிவை

பேதநன்கறி வார்களோடிவை
பேசினால்பெரி திஞ்சுவை
யாதுமொன்றறி யாதபிள்ளைக
ளோமைநீநலிந் தென்பான்
ஓதமாகடல் வண்ணாஉன் மண
வாட்டிமாரொடு சூழறம்
சேதுபந்தம் திருத்தினாயெங்கள்
சிற்றில்வந்து சிதையலே

பேதநங்கறிவார்களோடு- பேச்சு ஒன்றும் செயல் ஒன்றுமான உன் செயல்களுக்கு வித்தியாசம் நன்கு அறிந்தவர்களோடு
இவை பேசினால் பெரிதும் சுவை-இவை பேசினால் பெரிதும் சுவையானதாக இருக்கும்
யாது ஒன்றும் அறியாத-ஆனால், சூதுவாது அறியாத
பிள்ளைகளோம் எமை நீ நலிந்து என்ன பயன்-பிள்ளைகளான எங்களை நீ துன்புறுத்தி என்ன பயன்
ஓதமா கடல் வண்ணா- அலை கொண்ட கடல் நிறத்தானே
உன் மணவாட்டிமாரோடு சூழறம்-உன் மனைவிகளின் மீது ஆணை
சேது பந்தம் திருத்தினாய்- அணைக்கட்டினாய்
எங்கள் சிற்றில் வந்த சிதையலே-எங்கள் சிறு வீட்டை சிதைக்காதே

உன்னை அறிந்தவர்கள், உன் பேச்சுக்கும், செயலுக்கும் வித்தியாசம் அறிந்தவர்களோடு, பேசினால்..அது பெரும் சுவையாய் இருக்கும்.அதை விடுத்து,ஒரு விவரமும் அறியா, சூதுவாதற்ற சிறு பிள்ளைகளான எங்களை நீ துன்புறுத்தி என்ன பயன்.கடல்நிர வண்ணனே! சேது அணைகட்டியவனே, உன் மனைவியர் மீது ஆணை, எங்கள் சின்ன மணல் வீடினை சிதைக்காதே

No comments:

Post a Comment