Thursday, February 22, 2018

36- அற்றவன் மருதம் முறிய நடை

அற்ற வன்மரு தம்முறி யநடை
கற்ற வங்கஞ் சனைவஞ் சனையினால்
செற்ற வன்திக மும்மது ரைப்பதி
கொற்ற வன்வரில் கூடிடு கூடலே

அற்றவன் மருதம்-மென்பட்டைகள் அற்ற வல்லமை மிக்க மருத மரங்கள்
முறிய நடை கற்றவன்-முறிய நடை கற்றவன்
கஞ்சனை  வஞ்சனையினால் செற்றவன்- தாய்மாமன் கம்சனை வஞ்சனையினால் திறமையாக வென்றவன்
திகழும் மதுரைப்பதி கொற்றவன் -வட மதுரையின் அதிபதியாகிய அரசன்
வரில் கூடிடு கூடலே- என்னை வந்து சேருவார் எனில் கூடிடு கூடலே

வலைமை மிக்க மரப்பட்டைகள் கொண்ட மருத மரப்பட்டைகள் முறிய நடை பயின்றவன், மாமன் கம்சனை வென்றவன்.வடமதுரைக்கு அதிபதி என்னை வந்து சேருவார் எனில் கூடிடு கூடலே

(குபேரனின் பிள்ளைகளான நளகுபாரன்,மாணிக்ரீவன், பெண்களுடன் , சற்றும் வெட்கமின்றி நிர்வாணமாக ஆற்றில் குளித்ததால், மருத மரங்களாக மாறும் சபதம் பெற்றனர்.கண்ணன் குழந்தையாக இருந்த போது , கட்டப்பட்டிருந்த உரல், மருத மரத்தால் செய்யப்பட்டது.அதை, இழுத்து, இழுத்து நடை பயின்று, மரத்தை முறித்ததும் அவர்கள் சாப விமோசனம் பெற்றனர்) 

No comments:

Post a Comment