Wednesday, February 21, 2018

34- ஆய்ச்சிமார்களு மாயரு மஞ்சிட

ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட
பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து
வாய்த்த காளியன் மேல்நட மாடிய
கூத்தனார்வரில் கூடிடு கூடலே

ஆய்ச்சிமார்களும்- ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண்களும்
ஆயரும் அஞ்சிட-ஆயர் குலத்தைச் சேர்ந்த ஆண்களும் அஞ்சும்படி
பூத்தநீள் கடம்பு ஏறி- பூக்களுடன் உயரமாய் இருந்த கடம்ப மரமேறி
புகப் பாய்ந்து-நீரில் உட்புகப் பாய்ந்து குதித்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய-காளியன் என்ற நாகத்தின் மீது ஏறி நடனம் ஆடிய
கூத்தனார்வரில்- கூத்தனாருடன்
கூடிடு கூடலே- (நான் சேருவேனா ) கூடிடு நீ கூடலே

ஆயர்குலப் பெண்களும், ஆண்களும் அஞ்சும் படி, பூக்கள் நிறைந்த உயர்ந்த கடம்ப மரம் ஏறி, நீரில் தாவி குதித்து, அதன் உள் புகுந்து,பாய்ந்து, காளிங்கன் என்ற நாகத்தின் மீது நடனம் ஆடிய கூத்தனார் என கூடிடு கூடலே

(யாரோ ஒருவரை, குளத்தில் இருந்த பாம்பு பிடிக்க, அதைக் கண்ணனிடம் ஒருவர் சொல்ல, உடன் கடம்ப மரம் ஏறி அங்கிருந்து குளத்தில் பாய்ந்து, குதித்து காளிங்கன் என்ற பாம்பை அடக்கி, அதன் மீது நடனம் ஆடியவர் கண்ணன்) 

No comments:

Post a Comment