Thursday, February 22, 2018

40-பழகு நான்மறை யின்பொரு ளாய்மதம்

பழகு நான் மறை யின்பொரு ளாய்மதம்
ஒழுகு வாரண முய்ய வளித்தேம்
அழகனாரணி யாய்ச்சியர் சிந்தையுள்
குழகனார்வரில் கூடிடு கூடலே 

பழகு நான் மறையின் பொருளாய் - எல்லாருடைய பழக்கத்திலும் இருக்கும் நான் கு வேதங்களின் உட்பொருளானவன்
மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த என் அழகனார்-மதநீர் ஒழுகும் யானையை வேதனையில் இருந்து காத்தவன் என் அழகனார்
அணி ஆய்ச்சியர் சிந்தையுள்-அழகு மிக்க ஆய்ச்சியினர் சிந்தனையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே-கலந்து குழந்தவன் வருவானெனில் கூடிடு கூடலே

எல்லோரின் பழக்கத்திலும் இருக்கும் நான் கு வேதங்களின் ௐம் என்ற பிரணவத்தின் உட்பொருளானவன்/ மதநீர் ஒழுகிய யானையினை வேதனையிலிருந்து காத்து துன்பம் நீக்கியவன் என் அழகனார்.அழகு மிக்க ஆய்ச்சியர் சிந்தனையுள் கலந்து, குழைந்து இரக்கம் கொண்டு அருளுபவன், இளமையானவன், அழகானவன் ர்ன்னைத் தேடி வருவானாயின் கூடிடு கூடலே

No comments:

Post a Comment