Saturday, February 10, 2018

13-குண்டுநீருறை கோளரீ



குண்டுநீருறை கோளரீ! மத
யானைகோள் விடுத் தாய், உன்னைக்
கண்டுமாலுறு வோங்களைக்கடைக்
கண்களாலிட்டு வாதியேல்,
வண்டல்நுண் மணல் தெள்ளியாம்வளைக்
கைகளாற்சிர மப்பட்டோம்,
தெண்டிரைக் கடற்பள்ளியாய்! எங்கள்
சிற்றில்வந்து சிதையேலே

குண்டு நீர் உறை கோள் அரி- நீர் நிறைந்த மழைக்காலத்தில் சிங்கக் குட்டியைப் போல ஆலிலையில் துயின்று இருக்கும் அரியே
மதயானை கோள்விடுத்தாய்- முதலையிடம் சிக்கிய யானையைக் காப்பாற்றியவனே
உன்னைக் கண்டு மால் உறும் எங்களைக்-உன்னைக் கண்டு மயக்கமுறும் எங்களைக்
கடைக் கண்களாலிட்டு வாதியேல்-கடைக்கண்களால் பார்த்து துன்புறுத்தாதே
வண்டல் நுண்மணல்- நுண் வண்டல் மணல் கொண்டு
தெள்ளியாம் வளைக் கைகளாற் சிரமப்பட்டோம்-வளையல் அணிந்த எங்கள் கைகளால் சிரமப்பட்டு புடைத்து (கட்டிய)
தெண்டிரைக் கடற் பள்ளியாய்-அலைபாயும் கடல் மீது பள்ளி கொண்டு ள்ள பெருமாளே
எங்கள் சிற்றில் வந்து சிதையேலே-எங்கள் சிறிய வீட்டை சிதிக்காதே

மழைக் காலத்தில் நீர் நிறைந்திருக்கும் நீர்நிலையை குண்டு நீர் என் கிறார்

நீர் நிறைந்த மழைக்காலத்தில் சிங்கக்குட்டியைப் போல ஆலிலையில்துயின்று இருக்கும் அரியே!முதலையிடம் இருந்து யானையைக் காப்பாற்றியவனே!உன்னைக் கண்டு மயக்கம் கொள்ளும் எங்களை, உன் கடைக்கண்களால் மட்டுமே பார்த்து துன்புறுத்தாதே!நுண்ணிய வண்டல் மண்ணை மேலும் புடைத்து எடுத்து, எங்கள் வளையல்கள் அனிந்த கரம் கொண்டு பிசைந்து கட்டிய சிறு வீட்டை சிதைத்து விடாதே, அலைபாயும் கடல் மீது பள்ளி கொண்டுள்ள பெருமாளே



No comments:

Post a Comment