Monday, February 19, 2018

28-மாமியார் மக்களே யல்லோம்

மாமியார் மக்களே யல்லோம்
மற்றுமிங்  கெல்லாரும் போந்தார்
தூமலர்க் கண்கள் வளரத்
தொல்லையி ராத்துயில் வானே
சேமமே லன்றிது சாலச்
சிக்கென நாமிது சொன்னோம்
கோமள ஆயர்கொ ழுந்தே
குருந்திடைக் கூறை பணியாய்

மாமியார் மக்களே யல்லோம்- உனது முறைப்பெண்களான அத்தை பிள்ளைங்க மட்டுமல்ல
மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்-இங்கு எல்லோரும் வந்தாங்க.
தூமலர்க் கண்கள் வளர-வண்டுகூட வந்தமராத தூய்மையான மலர்ப் போன்ற கண்கள் வளர
தொல்லையிராத்துயில்வோனே- பகல் முழுதும் குறும்புத்தங்களால் தொல்லை செய்துவிட்டு இரவில் தூங்குபவனே
சேமம் மேல் அன்றி இது-இது உனக்கு பாதுகாப்புத் தரும் செயல் அல்ல.
காலச் சிக்கென நாமிது சொன்னோம்-உனது நலனுக்காக மிக உறுதியாக நாங்கள் சொல்கிறோம்
கோமள ஆயர் கொழுந்தே-மென்மையான ஆயர் கொழுந்தே
குறுந்திடை கூறை பணியாய்-குருந்தை மரத்தின் இடையே உள்ள எம் துணிகளை தந்தருள்க

உனது முறைப்பெண்கள் மட்டுமல்லாது, மற்ற பெண்களும் வந்துள்ளார்கள்.பரிசுத்தமான மலர் போன்ற கண்கள், பகல் முழுதும் குறும்புகளும், சேட்டைகளும் செய்து விட்டு இரவில் கண் வளர தூங்குபவனே!நீ எய்யும் செயல் நல்லது அல்ல.உன் நலத்திற்காக சொல்கிறோம் ஆயர் கொழுந்தே! குருந்த மரத்தின் இடையே உள்ள எங்கள் துணிகளை தந்துவிடுவாயாக

No comments:

Post a Comment