Tuesday, February 27, 2018

52- விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை

விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை
வேற்கண் மடந்தை விரும்பி
கண்ணுறவென் கடல் வண்ணனைக் கூவு
கருங்குயி  லேஎன்ற மாற்றம்
பண்ணுற நான்முறை யோர்புது வைமன்னன்
பட்டர்பி ரான் கோதை சொன்ன
நண்ணுறு  வாசக மாலைவல்லார்
நமோ நாராய ணாயவென் பாரே

விண்ணுற நீண்ட அடி தாவிய மைந்தனை- வானம் அளவு நீண்டு அடி தாவிய மைந்தனை
வேற்கண் மடந்தை விரும்பி-வேல் போன்ற கண்களையுடைய பெண் விரும்பி
கண்ணுற என் கடல் வண்ணனைக் கூவு-தான் பார்த்து மகிழ , நேரில் வந்து சேர ,என் கடல் வண்ணனை வரக் கூவு
கருங்குயிலே என்ற மாற்றம் பண்ணுற-கருங்குயிலே , என்று பத்துப் பாடல்களைப் பாடினாள்.
நான்மறையோர் புதுவை மன்னன்-நான் கு  மறை ஓதுபவர் வில்லிபுத்தூர் மன்னன்
பட்டர் பிரான் கோதை சொன்ன- பெரியாழ்வார் என்ற பட்டர் பிரான் மகள் கோதை சொன்ன
நண்ணுறு வாசக மாலைவல்லார்-நன்மையை விளைவிக்கும் இந்தப் பாமாலையைப் பாடுபவர்
நமோ நாராயனாய வென்பாரே- (அவன் திருவடிகளில்) நமோ நாராயணா எனக் கூறும் வல்லமையைப் பெறுவர்

(மடந்தை - 14 முதல் 19 வயதுள்ள பெண்கள்)
உல்களந்த பெருமாளை, வேல் போன்ற கண்கலையுடைய பெண் விரும்பி, தான் பார்த்து மகிழ, நேரில் வருமாறு கூவிடு குயிலே என்று பாடினாள்.
நான் கு மறை ஓதுபவர், வில்லிப்புத்தூர் மன்னன் பெரியாழ்வார் மகள் பாடிய குயிலைத் தூது விட்ட இப்பத்துப் பாடல்களைப் பாடினால்"நமோ நாராயணா" என்று கூறி அவனது திருவடிகளை அடையும் பாக்கியத்தினைப் பெறுவர்

No comments:

Post a Comment