Friday, February 23, 2018

41- ஊடல் கூடலுணர்தல் புணர்தலை

ஊடல் கூட லுணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறையுக ழாய்ச்சியர்
கூட லைக்குழற் கோதைமுன் கூறிய
பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே

ஊடல் கூடல் உணர்தல்- கண்ணனுடனான ஊடலும், அதன் பின்னால் கூடலும் இன்பத்தை உணர்தலும்
புணர்தலை- பின்னர் புணர்தலும்
நீடு நின்ற நிறைபுகழ் ஆய்ச்சியர்-நெடுங்காலம் நிலைத்து நின்ற நிறைந்த புகழுடைய ஆய்ச்சியர்
கூடலைக் குழற் கோதை முன் கூறிய-கூடல் விளையாட்டில் அழகியகூந்தலையுடைய கோதை கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே- இந்தப் பத்துப் பாடலையும் பாடும் வல்லவர்க்கு இல்லை பாவம்

முதலில், செல்லமான சண்டைகள்,சமாதானம் பின் புணர்தல்.பிரியாமல் நெடுங்காலம் நிலைத்துக் கண்ணனுடன் நின்ற ஆய்ச்சியர் விளையாடும் கூடல் விளையாட்டை  வைத்து அழகிய கூந்தலையுடைய கோதையின் , இந்தப் பத்துப் பாடல்களை பாடும் வல்லமை பெற்றோருக்கு இல்லை பாவம் (அனைத்தும் புண்ணியமே)

No comments:

Post a Comment