Tuesday, February 27, 2018

50- பைங்கிளி வண்ணன் சிரீதரனெம்பதோர்

பைங்கிளி வண்ணன் சிரீதரனென்பதோர்
பாசத் தகப்பட்டி ருந்தேன்
பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி
லே!குறிக் கொண்டிது நீ கேள்
சங்கொடு சக்கரத் தான் வரக் கூவுதல்
பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில்
இரண்டத்தொன்றேல்திண்ணம் வேண்டும்

பைங்கிளி வண்ணன் சிரீதரனென்பதோர் பாசத்து அகப்பட்டிருந்தேன்- பசுமையான கிளி வண்ணம் கொண்ட சிரீதரன் என்பதோர் பாசத்தில் நான் அகப்பட்டு இருந்தேன்
பொங்கும் ஒளி வண்டு இரைக்கும் பொச்ழன்ங்குடன் சக்கர வாழ் குயிலே-ஒளி மிக்க வண்டுகள் ரீங்காரமிடும் சோலையில் வாழும் குயிலே
குறிக்கொண்டு இது நீ கேள்- நான் சொல்வதைக் கவனமாகக் கேள்
சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல்-சங்குடன், சக்கரமும் சேர்த்து வைத்துள்ளவனை வருமாறு கூவு
பொன்வளை கொண்டு தருதல்-அல்லது என் பொன் வளையல்களைத் திருப்பிக் கொடு
இங்குள்ள காவினில் வாழக் கருதில்-இங்கு சோலையில் நீ வாழவேண்டுமாயின்
இரண்டத் தொன்றேல் திண்ணம் வேண்டும்-இந்த இரண்டினில் ஒன்றை நீ உறுதியாய் செய்திடல் வேண்டும்

பசுங்கிளி போன்றபச்சை நிறத்தவன் ஸ்ரீதரன்.அவன் மீது பாசம் வைத்து அதிலேயே அகப்பட்டுக் கொண்டேன்.ஒளி மிகுந்த வண்டுகள் ரீங்காரமிடும் சோலையில் வாழும் குயிலே! நான் சொல்வதைக் கேள்.சங்குடன் சக்கரமும் வைத்திருப்பவனை வரச்சொல்லிக் கூவு.இல்லையேல், அவன் என்னை சேராததால் வருந்தி, மெலிந்த என் கைகளிலிருந்து கழண்டு விழுந்த பொன் வளையல்களைத் திருப்பித்தந்துவிடு.
இந்த சோலையிலெயே இருக்க வேண்டுமானால், இந்த இரண்டில் ஒன்றைச் செய்வாயாக


No comments:

Post a Comment