Friday, February 9, 2018

10- கருப்புவில் மலர்க்கணைக் காமதேவனை

கருப்புவில் மலர்க்கணைக் காமதேவனைக்
கழலினை பணிந்தங்கோர் கரியலற,
மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த
மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று,
பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,
விருப்புடை யின்தமிழ் மாலை வல்லார்
விண்ணவர் கோனடி நண்ணுவரே.

கருப்புவில் மலர்க்கணைக் காமதெவனை- கரும்பு வில்லும் மலர்கணைகளும் கொண்ட காமதேவன்
கழலினை பணிந்து-அவன் திருவடி பணிந்து
அங்கு ஓர் கரி அலற-அங்கே ஓர் யானை அலற
மருப்பினையொசித்துப்-அதன் தந்தம் ஒடித்து
புள் வாய்பிளந்த- பகாசுரன் என்ற கொக்கு அரக்கன் வாய் பிளந்த
மணிவண்ணனுக்கு என்னை வகுத்திடு என்று-மணிவண்ணனுக்கு என்றே என்னை உரியவள் ஆக்கிவிடு
என்று
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும்-மலைபோன்ற மாடங்கள் அழகாகத் தோன்றும்
புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை-வில்லிபுத்தூர்
சான்றோர் விஷ்ணுசித்தன் மகள் கோதை
விருப்புடையின் தமிழ் மாலை வல்லார்-விருப்பமுடன் பாடிய இந்தத் தமிழ் பாமாலையை பாடல் வல்லார்
விண்ணவர் கோன் அடி நண்ணுவரே-விண்ணகத்தில் இருக்கும் அந்த பரமனடி நலம் பெறுவரே

கரும்பு வில்லும்,மலர்க்கணைகளும் கொண்ட காமதேவனின்  திருவடிகள் பணிந்து ஆங்கோர் யானை அலற,,(ஆங்கோர் யானை அலற என்பது பகாசுரனால் ஏவிவிடப்பட்ட  குவலய பீடம் என்ற யானையின் தந்தத்தை ஒடித்துக் கொன்றவன் கண்ணன்)
பகாசுரன் என்ற கொக்கு அசுரன் வாய் பிளந்த மணிவண்ணனுக்கே  என்னை உரியவள் ஆக்கிவிடு.என்று, மலை போன்ற அழகான மாடங்களை உடைய வில்லி புத்தூர் சான்றோர் விஷ்ணு சித்தன் எனும் பெரியாழ்வார் மகள் கோதை விருப்புடன் சொன்ன இந்தப் பாமாலைகளைப் பாடுவோர் விண்ணகத்தில் அந்தப் பரமனின் திருவடி சேர்ந்து
நலம் பெறுவர்

!

No comments:

Post a Comment