Friday, February 16, 2018

21- கோழியழைப்பதன் முன்னம்//

(21 முதல் 30 வரையிலான பாடல்களில், ஆயர் குலப் பெண்களின் துணிகளைத் திருடி அவர்களிடம் குறும்பு செய்யும் பாவனைகள் கொண்டவை.அதிகாலை குளிக்கச் சென்ற பெண்கள் அறியாமல் அவர்கள் குளிக்கின்ற நேரம் அவர்கள் துணிகளை திருடி வைத்துக் கொண்டு குறும்பு செய்யும் கண்ணனிடம் பெண்கள் தங்கள் உடைகளை வேண்டிக் கேட்கின்றார்கள்)

கோழியழைப்பதன் முன்னம்..
குடைந்து நீராடுவான் போந்தோம்- வெள்ளென எழுந்து குளத்தில் நீச்சடித்து நீராட வந்தோம்
ஆழியஞ் செல்வன் எழுந்தான்-கதிரவன் எழுந்தான்
அரவணை மேல் பள்ளி கொண்டாய்- பாம்பின் மீது படுத்திருப்பவனே
ஏழமை ஆற்றவும் பட்டோம்-இல்லாமையை ஆற்ற கடமைப் பட்டோம்
இனி என்றும் பொய்கைக்கு வாரோம்-இனி எப்போதும் பொய்கைக்கு வர மாட்டோம்
தோழியும் நானும் தொழுதோம்-நானும் என் தோழியும் உன்னை வேண்டி கும்பிட்டுக் கேட்கிறோம்
துகிலைபணித்தருளாயே- எங்கள் துணியை தந்துவிடு

கோழி கூவும் முன்னர்குளத்திற்குச் சென்று நன்கு முங்கி முங்கிக் குளிக்கச் சென்றோம்.கதிரவனும் உதித்து விட்டான்.பாம்புமீது படுத்தவனே, உன் சேட்டையால், துணிகளை இழந்து குளத்தைவிட்டு வெளியே வரத் தவிக்கிறோம்.நானும் , என் தோழியும் உன்னை கையெடுத்து கும்பிட்டு வேண்டுகிறோம்., இனி குளத்துப் பக்கமே வரமாட்டோம்.எங்களது துணிகளை மட்டும் தந்துவிடு.  

No comments:

Post a Comment