Friday, February 9, 2018

9 - தொழுதுமுப் போதுமுன்னடி வணங்கி

தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித் 
தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்,
பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே 
பணிசெய்து வாழப் பெறாவிடில்நான்,
அழுதழு தலமந்தம் மாவழங்க 
ஆற்றவு மதுவுனக் குறைக்குங்கண்டாய்,

உழுவதொ ரெருந்தினை நுகங்கொடுபாய்ந்து
ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே


தொழுது முப்போதும்- மூன்று வேளைகளும் உன்னைத் தொழுது
உன்னடி வணங்கி-உன் திருவடி வணங்கி
தூமலர் தூய்த்தொழுது ஏத்துகின்றேன்-தூய்மையான மலர் கொண்டு வேண்டுகின்றேன்
பழுதின்றிப் பாற்கடல் வண்னனுக்கே-எந்த்க் குறையுமன்றிபாற்கடல் கண்ணனுக்கே
பணிசெய்து வாழப்பெறாவிடில் நான்- பணி செய்து வாழும் பேறு பெறாவிடில் நான்
அழுதழுது அலமந்தம் அம்மா வழங்க ஆற்றவும்-அழுதழுது தடுமாறிப்போய் நான் அம்மாவென அரற்ற
அது உனக்கு உறைக்கும் கண்டாய்-மிகவும் அது உனக்கு உறைக்கும் அளவிற்கு வலிக்கும்
உழுவ்ழ்தொ ரெருந்தினை நுகங்கொடு பாய்ந்து-உழுகின்ற எருதினை ஏர் பிடித்து நுகங்கொண்டே இடித்து அதைத் துடிக்க வைத்து
ஊட்டமின்றித் துரந்தால் ஒக்கும்- அதற்கு உணவு கொடுக்காது ஒதுக்கியது போல பாவம் வரும்

மூன்று வேளைகளும் உன்னைத் தொழுது, உன் திருவடி வணங்கி,தூய்மையான மலர்களை, கள்ளம் கபட இல்லாமல் தூய நல் உள்ளத்தோடு தூவித் தொழுது நோன்பு இருக்கின்றேன்..காமதேவா!
எந்தக் குறையுமின்றி பாற்கடல் கண்ணனுக்கு பணி செய்து மகிழ,அவன் மனைவியாகாவிடில்..நான் அழுது அழுது அம்மாவென அழுவேன்.அந்த வலி உனக்கு உறைக்கும்.
(அந்த வலி எப்படியிருக்குமாம்...உழுகின்ற உழவு மாடுகளை,நுகங்கொண்டே இடித்து துடிக்கவைத்து, அதற்கு உணவும் கொடுக்காமல் இருந்தால் எவ்வளவு பாவமோ..அவ்வளவு பாவம் வர உரைக்குமாம்)


No comments:

Post a Comment