Tuesday, February 13, 2018

16- முற்றிலாத பிள்ளைகளோம்

முற்றிலாத பிள்ளைகளோம் முலை
போந்திலா தோமை நாடோறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீசிறி
துண்டு திண்ணென நாமது
கற்றிலோம், கடலையடைத் தரக்
கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசலாக்கிய
வேகா ! எம்மை வாதியேல்

முற்று இலாத பிள்ளைகளோம்- முதிர்ச்சி பெறாத இளம்பிள்ளைகள் நாங்கள்
முலை போந்திலா தோமை நாள்தோறும்-முலைகூட சரியாக வளராத எங்களை நாள் தோறும்
சிறிய இல் மேல் இட்டுக் கொண்டு- நாங்கள் கட்டும் சிறிய வீட்டின் மேல் ஏறிக்கொண்டு
நீசிறிது உண்டு- நீ செய்யும் செயல்கள் சில உண்டு
திண்ணென நாம் அதை கற்றிலோம்-அதை  முறிக்கும் வல்லமை நாங்கள் ஏற்கவில்லை
கடலை அடைந்த அரக்கர் குலங்களை முற்றவும்-கடலை அடைத்து (அணை கட்டி)அரக்கர் குலங்களை முழுமையாக அழிக்கவும்
செற்று இலங்கையைப் பூசலாக்கிய வேகா-பகையை இலங்கைக்குச் சென்று சண்டையிட்டு வென்ற வீரமுடையவனே!(செயலில் வேகமுடையவனே)
எம்மை வாதியேல்- எங்களை துன்புறுத்தாதே!

முலைகூட சரியாக வளரா இளம் பிள்ளைகள் நாம்கள்.அப்படிப்பட்ட நாங்கள் கட்டிய சிறு வீட்டை சிதைக்கும் நோக்கில், நீ செய்யும் செயல்களை முறியடிக்கும் அளவிற்கு வல்லமை இல்லை.கடலில் அணையைக் கட்டி , இலங்கை வரை சென்று அரக்கர் குலத்தை அழித்த வீரம் மிக்கவனெ! செயலில் வேகம் கொண்டவனே! எங்களை துன்புறுத்தாதே!


No comments:

Post a Comment