Wednesday, February 28, 2018

56= நாற்றிசைத் தீர்த்தங்கொணர்ந்து நனிநல்கி

நாற்றிசைத் தீர்த்தங்கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பன சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை
காப்புநாண் கட்டக் க னாக்கண்டேன் தோழீ

நாற்றிசைத் தீர்த்தங்கொணர்ந்து நனிநல்கி- நான்கு  திசைகளில் இருந்தும் தீர்த்தம்கொண்டு வந்து அதை நன்றாகத் தெளித்து
பார்ப்பன சிட்டர் கள் பல்லார் எடுத்தேத்தி-வேதம் ஓதும் அந்தணர்கள் பலர் மந்திரம் சொல்லி
பூப்புனை கண்ணிப்புனிதனோடு  என்றன்னை-பலவித பூக்களை மாலைகளாக அணிந்த புனிதனான கண்ணனோடு  என்னை இணைத்து
காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீ-காப்புக்கயிறு கட்ட கனவு கண்டேன் தோழீ

(இந்து சம்பிராதயப்படி..ஒவ்வொன்றாக திருமணச் சடங்குகள் நடப்பதாகக் கனவு காண்கிறாள்)

நான்கு திசைகளில் இருந்தும் தீர்த்தம் கொண்டு வந்து அதைத் தெளித்து,வேதம் ஓதும் பார்ப்பனர்கள் மந்திரம் சொல்ல, பலவிதமான பூக்களை மாலைகளாக அணிந்த புனிதனான கண்ணனோடு என்னை இணைத்து, காப்புக்கயிறு (கங்கணம்) கட்டக் கனாக் கண்டேன் தோழீ 

No comments:

Post a Comment