Tuesday, February 27, 2018

53- வாரணமாயிரம்

(திருவாய்மொழியின்  முதல் பத்துப் பாடல்கள், மன்மதனிடம் வேண்டுதல்,அடுத்து சிற்றில் சிதையாதே என்று பத்துப்பாடல்கள்,பின்னர்..உடைகளைத் திருடியவனிடம் ,திருப்பித் தர வேண்டி பத்துப்பாடல்கள்,கூடல் குறி கேட்டு பத்துப் பாட்ல்கள்,குயிலைக் கூவச் சொல்லிப் பக்த்துப்பாடல்கள் முடிந்தன.
இனி, கண்ணனுடன், திருமணம் ஆனால் எப்படி இருக்கும் என கனவு காண்கிறாள் நங்கை.இந்த வாரணம் ஆயிரம் , பதினொன்று பாடல்களை பாராயணம் செய்தால் திருமண யோகம் கிட்டும் என்று ஒரு நம்பிக்கை.
அந்த நம்பிக்கை சரியோ, தவறோ....அது பற்றியெல்லாம் கவலைப்படாமல்நாச்சியார் கனாக் காணும் அழகினை ரசியுங்கள்)

வாரண மாயிரம் சூழவ லம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து- ஆயிரம் யானைகள் புடைசூழ தெருக்களைச் சுற்றி வந்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்-அந்த நாராயணன் நம்பி நடக்கின்றான், அவரை எதிர் கொண்டு வரவேற்க
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்-பூரண கும்பமும், பொற்குடமும் வைத்து நாற்புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்- தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

நாலாபுரமும் தோரணங்கள் என தெருவே கலை கட்டி நிற்க, ஆயிரம் யானைகள் புடை சூழ கம்பீரமாக சுற்றிவரும் (மாப்பிள்ளை ஊர்வலம்)நாராயணன், பின் இறங்கிக் கம்பீரமாக நடந்து வர, பொன்னாலான பூர்ண கும்ப மறியாதைககளுடன் எதிர் கொண்டு வரவேற்கிறார்களாம்..அப்படிப்பட்ட கனவு ஒன்றினைக் கண்டேன் தோழீ .

No comments:

Post a Comment