Wednesday, February 28, 2018

57- கதிரொளி தீபம்க லசமுடனேந்தி

கதிரொளி தீபம்க லசமு டனேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்

கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி- கதிரவனின் ஒளிபோல ஒளி வீசும் தீபங்களையும்,பொற் கலசங்களையும் ஏந்தி
சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள-அழகிய இளமையான பெண்கள் தாமே முன் வந்து எதிர் கொள்ள
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு எங்கும்-(வட) மதுரை மன்னன் நடப்பதில் அவன் பாதத்தின் அடியில் இருந்து நிலம் எங்கும்
அதிரப் புகுதக்- அதிர (அவர் நடந்து வந்து மணப்பந்தல்)புகுவது   போன்று
கனாக் கண்டேன் தோழீநான்-நான் கனவு கண்டேன் தோழீ


அழகிய இளம்பெண்கள், சூரியனின் ஒளி போன்று ஒளி வீசும் தீபங்களையும், பொன் கலசங்களையும் ஏந்தி வரவேற்க மாப்பிள்ளையான வடமதுரை கண்ணன் நிலம் அதிருபடியாக நடந்து வந்து மணப்பந்தலில் புகுவது போல கனாக் கண்டேன் தோழீ

No comments:

Post a Comment