Thursday, February 22, 2018

37- அன்றின்னாதன செய்சிசு பாலனும்

அன்றின்னாதன செய்சிசு பாலனும்
நின்ற நீளமரு தும்மெரு தும்புள்ளும்
வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழமுன்
கொன்ற வன்வரில் கூடிடு கூடலே

அன்று இன்னாதன செய்த சிசுபாலனும்- அன்று செய்யத் தகாத செயல்களைச் செய்த சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்-மருத மர வடிவில் வழி மறித்து நின்ற நளகுபாரன்,மாணிக்ரீவனும், எருது வடிவில் நின்ற அரிஷ்டாகரனும், கொக்கு வடிவ பகாசுரனும்
வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழ-கண்ணனின் வெற்றிதரும் வேலால் கஞ்சனும் வீழ
மும் கொன்றவன்-இவர்கள் யாவரையும் முன் நின்று கொன்றவன்
வரில் கூடிடு கூடலே-வருவார் எனில் நீ கூடிடு கூடலே

(மாபெரும் சபையில் கிருஷ்ணரை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியவன் சிசுபாலன்)தன்னை இகழ்ந்த சிசுபாலனை , நூறு பிழைகள் பொறுத்தபின் கிருஷ்ணன் வதம் செய்தான்.
அடுத்து, நளகுபாரன்,மாணிக்ரீவன் இருவரும் மருத மரங்களாக சாபம் பெற்றவர்கள்.கிருஷ்ணரால் சாப விமோசனம் பெற்றவர்கள்
எரூது வடிவில் வந்த அரிஷ்டாசுரன்...ஒரு கிராமத்தையே வெகுவாகத் துன்புறுத்த கிருஷ்ணர் அவனை வதைத்தார்
கொக்கு வடிவில் வந்த பகாசுரனை அழித்தார்
அப்படிப்பட்ட கண்ணன் என்னைக் கூட வருவாரா என கூடிடு கூடலே

No comments:

Post a Comment