Tuesday, February 20, 2018

30-கன்னிய ரோடெங்கள் நம்பி

கன்னிய ரோடெங்கள் நம்பி
கரிய பிரான்விளை யாட்டை
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த
புதுவையர் கோன்பட்டன் கோதை
இன்னிசை யால்சொன்ன மாலை
ஈரைந்தும் வல்லவர் தாம்போய்
மன்னிய மாதவனோடு
வைகுந்தம் புக்கிருப்பாரே

கன்னியரோடு எங்கள் நம்பி - கன்னியர்களுடன் எங்கள் நம்பி நாராயணன்
கரியபிரான் விளையாட்டை-கருமை நிறக் கண்ணன் விளையாட்டை
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த-பொன் வேய்ந்த மாடங்கள் சூழ்ந்த
புதுவையர் கோன் பட்டன் கோதை-வில்லிபுத்தூர் தலைவன் (பெரியாழ்வார்) கோதை
இன்னிசையால் சொன்ன மாலை-இன்னிசையால் பாடிய பாடல்
இரு ஐந்தும் வல்லவர் தாம் போய்- பத்தும் பாடும் வல்லவர்கள்
மன்னிய மாதவனோடு-என்றும் நிலைபெற்ற மாதவனோடு
வைகுந்தம் புக்கிருப்பாரே-வைகுந்தத்தில் புகுந்திருப்பர்

கன்னிப் பெண்களுடன், நம்பி நாராயணன்,கருமை நிறக் கண்ணன் விளையாடிய , இது போன்ற விளையாட்டை, பொன்வேய்ந்த மாடங்கள் சூழ்ந்த வில்லிப்புத்தூர் பட்டன் பெரியாழ்வார் மகள் கோதை, இன்னிசைபாக்களாகச் சொன்ன இப்பத்து பாடல்களையும் பாடுபவர்கள் என்றும் நிலையாக மாதவனுடன் வைகுந்தத்தில் புகுவர்.

No comments:

Post a Comment