Wednesday, February 7, 2018

5 - வானிடை வாழுமவ் வானவர்க்கு

வானிடை வாழுமவ் வானவர்க்கு 
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி,
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
 கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று
 உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,
மானிட வர்க்கென்று பேச்சுப்படில் 
வாழ்கில்  லேன்கண்டாய் மன்மதனே


 வானிடை வாழும் அவ் வானவர்க்கு - வானத்தில் வசிக்கும் தேவர்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி- வேதம் ஓதுபவர்கள் வேள்வியில் இட்ட வேள்விப் பொருட்களை
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து-காட்டில் திரியும் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப- அதைக் கடந்து செல்வதோ அல்லது முகர்ந்து பார்ப்பதோ செய்வதைப் போல
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று-என் உடம்பும் சங்கு சக்கரம் கொண்ட உத்தமனுக்கென்றே
உன்னித் தெழுந்த என் தடமுலைகள்-விம்பி எழுந்த என் பெரிய கொங்கைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்-சாதாரண மனிதர்களுக்கு என்று பேச்சு வந்தால்
வாழ்கில்லேன் கண்டால் மன்மதனே-வாழவே மாட்டேன் மன்மதனே

தேவர்கள் உட்பட அனைத்துத் தெய்வங்களுக்கும், வேதம் ஓதுபவர்கள்
வேள்வியில் இட்ட வேள்விப் பொருட்களை, காட்டில் உலவும் நரி புகுந்து முகர்ந்து பார்ப்பது போல, எனது கொங்கைகள் சங்கு-சக்கரம் கொண்ட உத்தமனுக்காக ஆகும் .அது சாதாரண மனிதர்களுக்கு என்று யாரேனும் சொன்னால் நான் உயிர் வாழ மாட்டேன்

No comments:

Post a Comment