Wednesday, February 28, 2018

55= இந்திர நுள்ளிட்ட தேவர்குழாமெல்லாம்

இந்திர னுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந் தென்னமை கட்பேசி மந்தரித்து
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீ

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்-இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி  தேவர் கூட்டம்
வந்திருந்து என்னமை கட்பேசி மந்தரித்து-அனைவரும் வந்து விழாவை சிறப்பித்து  இதுதான் பெண் என்று பேசி முடிவு செய்து, மந்திரம் சொல்லி
மந்திரக் கோடி உடுத்தி-மணப்பெண்ணிற்கு புதுத்துணி உடுத்தி
மணமாலை சூட்டக் கனாக் கண்டேன் தோழீ-மாதவனின் தங்கையான துர்க்கை மணமாலையை அணிவித்துவிட கனாக் கண்டேன் தோழீ

இந்திரன் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்கள் வர, இரு வீட்டார் சம்மதத்துடன், இதுதான் பெண், இதுதான் மாப்பிள்ளை என்று பேசி, அவங்க நல்லபடி வாழ மந்திரங்கள் சொல்லி,மணப்பெண்ணுக்கு புத்தாடை உடுத்தி, அந்தரி என்னு மணமகனின் தங்கை மூலமாக மணமாலையும் சுட்டறாங்க.இப்படியெல்லாம் கனாக் கண்டேன் தோழீ என் கிறார்.

No comments:

Post a Comment