Friday, February 9, 2018

11 - நாமமாயிரம் மேத்த நின்ற

 நாச்சியார் திருமொழி இரண்டாம் பத்து

(இதில் ,தான் கட்டும் சிறுமணல்வீட்டை இடிக்காதே என்று கண்ணனிடம் வேண்டுகிறாள் கோதை.கண்ணனை தன் தோழனாக நினைத்து செல்ல சண்டையிட்டுக் கொள்கிறாள்)

நாமமாயிர மேத்த நின்ற
நாராயணாநர னேஉன்னை 
மாமிதன் மகனாகப் பெற்றா
லெமக்கு வாதை டஹ்விருமே,
காமன்போதரு கால்மென் றுபங்க்
குனிநாள்கடை பாரித்தோம்
தீமை செய்யும்  சிரீதரா! எங்கள்
சிற்றில்வந்து சிதையேலே 

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற - ஆயிரம் பெயர்களால் அடியார்கள் போற்றுகின்ற
நாராயணா நரனே- நாராயணனே நரனே
உன்னை மாமி தன் மகனாகப் பெற்றால்-உன்னை மாமி (அத்தை) தன்  மகனாகப் பெற்றால்
எமக்கு வாதை தவிருமே-எங்களுக்குத் துன்பம் நீங்குமே
காமன் போதரு காலமென்று- காமன் வருகின்ற காலமென்று
பங்குனி நாள் கடை பாரித்தோம்-பங்குனி நாள் அவன் வரும் வழியில் கடை விரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா- எங்களை வீடு கட்ட விடாமல் இடையூறாக
எங்கள் சிறு இல் வந்து சிதையிலே-எங்களின் இந்த சிறிய வீட்டை நீ வந்து சிதைக்காதே

ஆயிரம் பெயர்களால் அடியார்கள் போற்று கின்ற நாராயணா..உன்னை என் மாமி மகனாகப் பெற்றால் எனது துன்பம் நீங்குமே!காமன் வரும் காலமென,  பங்குனி நாள் நீவரும் வழியில் கடை விரித்தோம்.எங்களை  வீடு கட்ட விடாது சிறிய வீட்டை வந்து சிதைக்காதே!






.

No comments:

Post a Comment