Sunday, February 18, 2018

25- காலைக் கதுவிடு கின்ற

காலைக் கதுவிடு கின்ற
கயலோடு வாளை விரவி
வேலைப் பிடித்தென்னை மார்கள்
ஓட்டிலென்ன விளை யாட்டோ
கோலச்சிற்றாடை பலவுங்
கொண்டுநீ யேறி யிராதே
கோலங் கரிய பிரானே
குருந்திடைக் கூறை பணியாய்

காலைக் கது விடுகின்ற- காலைப் பற்றுகின்ற
கயலோடு வாளை விரவி-கயல்மீன் களோடு வாளைமீனும் ஒன்று கூடி
வேலைப் பிடித்து எந்தென் ஐ மார்கள்- வேலைப் பிடித்துக் கொண்டு என் தந்தை/அண்ணன்மார்
ஓட்டில் என்ன விளையாட்டோ- உன்னை ஒட விட்டுத் துரத்தினால்(என்னாவாவது)இது என்ன விளையாட்டா
கோலச் சிற்றாடை பலவுங்கொண்டு-அழகிய எங்கள் சிற்றாடைகள் பலவற்றையும் எடுத்துக்கொண்டு
நீ ஏறி இராதே- நீ மரத்தின் மீது ஏறி உட்காராதே
கோலங்கரிய பெருமானெ!= கரிய திருமேனியைக் கொண்ட அழகிய பிரானே
குருந்திடைக் கூறைப் பணியாய்-குருந்த மரத்தின் இலையில் வைத்திருக்கும் எங்கள் ஆடைகளைக் கொடுத்துவிடு

(ஆடை இல்லாமல் நீண்ட நேரம் நீரில் நின்றதால்) கயல்  மீன் களோடு, வாளை மீனும் ஒன்று கூடி காலை வந்து பிடிக்கிறது.பெண்பிள்ளைகள் குளிக்கும் இடத்தில் வந்து சேட்டைப் பண்ணினால், அதைப் பார்த்த்க் கொண்டிருக்கும் எங்களது தந்தை/அண்ணன்மார்கள், வேலை எடுத்துக் கொண்டு உன்னை அடிக்க வருவார்கள்.அதைக் கண்டு நீ ஓடணும்.இதெல்லாம் பார்க்க நன்றாகவா இருக்கும்? (இருக்காது).ஆகவே, இந்த விளையாட்டு வேண்டாம்.அழகான  எங்கள் சிறு ஆடைகளை எடுத்துக் கொண்டுமரத்தின் மீது உட்கார்ந்து இராதே!கரிய அழகிய மேனி கொண்டவனே! குருந்த மரத்தின் கிளைகளில் ஒளித்து வைத்துள்ள எங்களது ஆடைகளைக் கொடுத்துவிடு.

No comments:

Post a Comment