Sunday, February 18, 2018

26- தடத்தவிழ் தாமரைப் பொய்கை

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத்
தாள்களெங் காலைக் கதுவ
விடத்தே றெறிந்தாலே போல
வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை யெடுத்தேற விட்டுக்
கூத்தாட வல்லங் கோவே
படிற்றையெல் லாம் தவிர்ந்
தெங்கள் பட்டைப் பணித்தருளாயே

தடித்து அவிழ் தாமரைப் பொய்கைத் தாங்கள்-பொய்கையில் மலர்ந்த பெரிய தாமரையின் தண்டுகளானது
எங்கள் காலைக் கதுவ- எங்கள் கால்களைப் பற்ற
விடத்தேறி எறிந்தாலே போல- விஷம் கொண்ட தேள் கொட்டினாற் போல
வேதனை ஆற்றவும்  பட்டோம்- மிகுந்த வேதனை அடைந்தோம்
குடத்தைஎடுத்தேற விட்டு- குடத்தைத் தலையில் எடுத்து ஏறவிட்டு (கரகம்)
கூத்தாட வல்ல எங்கோவே-கூத்தாட வல்ல எங்கள் அரசரே!
படிற்ரை எல்லாம் தவிர்ந்து-உன் குற்றங்களையெல்லாம் நீ உணர்ந்து
எங்கள் பட்டைப் பணித்தருளாயே- எங்கள் பட்டு ஆடையைக் கொடுத்து அருள்வாயாக

(நீண்ட நேரம் நின்றதால்) பொய்கையில் மலர்ந்துள்ள தண்டுகள் கால்களில் பற்றிக்  கொள்ளும்போது, விஷம் கொண்ட தேள்கள் கொட்டினாற்போல வேதனையாய் இருக்கிறது.குடத்தைத் தலையில் வைத்து (கரகம்) கூத்தாட வல்ல அரசரே!(எங்களது ஆடைகளை எடுத்து வைத்துள்ள) உன் குற்றங்களை நீ உணர்ந்து, எங்கள் பாட்டு ஆடைகளைத் திருப்பித் தருவாயாக!


No comments:

Post a Comment