Thursday, February 22, 2018

39- கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று

கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று
பண்டு மாவலி தன்பெரு வேள்வியில்
அண்ட மும்நிலனும் அடி யென்றினால்
கொண்ட வன்வரில் கூடிடு கூடலே

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று-சிறியவனாக, குள்ளனாக உருவெடுத்து
பண்டு மாவலி தன் பெரு வேள்வியில்-பண்டைய காலத்தில் மாவலியின் பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி ஒன்றினால் கொண்டவன்-இந்த அண்டம் முழுதும் நிலத்தையும் ஒன்றச் செய்து தனது காலடி மூலம் தனதாக்கிக் கொண்டவன்
வரில் கூடிடு கூடலே- என்னைத் தேடி வருவானா? கூடிடு கூடலே

சிறியவனாக, குள்ளனாக உருவெடுத்து, முந்தைய காலத்தில் மாவலி சக்கரவர்த்தியின் வேள்வியில் அண்டமும்,நிலமும் தன் காலடிகளால் ஒன்றச் செய்து தனதாக்கிக் கொண்டவன் , என்னைக் கூட வருவார் எனில் நீ கூடிடு கூடலே

No comments:

Post a Comment