Sunday, February 25, 2018

45-என்புருகியின வேல்நெடுங்கண்கள்

என்புரு கியன வேல்நெடுங்கண்கள்
இமைபொருந் தாபல நாளும்
துன்பக் கடல்புக்கு வைகுந்தனென்பதோர்
தோணி பெறாதுழல் கின்றேன்
அன்புடை யாரைப் பிரிவுறுநோயது
நீயு மறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப்
புண்ணிய னைவரக் கூவாய்

என்பு உருகியின- என் எலும்புகள் உருகின
வேல் நெடுங்கண்கள் இமை பொருந்தா பல நாளும்-வேலினை ஒத்த நீண்ட என் கண்கள் இமை மூடவில்லை
பல நாளும் துன்பக் கடல் புக்கு-பல நாட்களாக துன்பம் எனும் பெரும் கடளில் மூழ்கிக் கொண்டிருக்கின்றேன்
வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்-வைகுந்தம் என்பவனே எனக்கு அந்தக் கடலில் இருந்துமீட்கும் தோணியாக வரமுடியும்.அந்தத் தோணியைப்  பெற இயலாது உழல்கிறேன்
அன்புடையாரைப் பிரிவுறும் நோய் அது-அன்புக்குரியவர்களைப் பிரிந்து வடும் நோய் அதுவென
நீயும் அறிதி குயிலே-நீயும் அறிந்திருப்பாய் அல்லவா குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடை-பொன்னை ஒத்த மேனி கொண்ட கருடனின் கொடியைக் கொண்ட
புண்ணியனை வரக் கூவாய்- புண்ணியன் வரக் கூவுவாயாக

(பசலை நோயால்) என் எலும்புகள் உருகின.வேலினை ஒத்த நீண்ட என் கண் இமைகள் மூடவில்லை.பல நாட்களாகத் துன்பக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றேன்.அதை மீட்க வைகுந்தம் என்பவன் ஒருவனால்தான் முடியும்.அதைப் பெற இயலாது உழல்கிறேன்.இது, அன்புக்குரியவர்களை பிரிந்து வாடும் நோய் இதுவென நீ அறிவாயேகுயிலே.ஆகவே..பொன்னினை ஒத்த மேனியைக் கொண்டவனும், கருடனைக் கொடியாகவும்கொண்ட புண்ணியன் வைகுந்தனை வரச் சொல்லி கூவுவாயாக!

No comments:

Post a Comment