Wednesday, February 21, 2018

32- காட்டில் வேங்கடம்

காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்ட ராவந்தென் கைப்பற்ரி தன்னோடும்
கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே

காட்டி வேங்கடம்- காட்டில் உள்ள திருவேங்கட மலையிலும்
கண்ணபுரநகர்- (நகரில் உள்ள) கண்ணபுரத்திலும்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்-எந்த வருத்தமுமின்றி மகிழ்ந்து குடிகொன்டுள்ள வாமன அவதாரம் எடுத்த கண்ணன்
ஓட்டாரா வந்து என் கைப்பற்றி- ஓடி வந்து என் கைப்பற்றி
தன்னோடும் கூட்டுமாகில்-தன்னோடு என்னை அணைத்துக் கொள்வானாகில்
நீ கூடிடு  கூடலெ- நீ கூடிடு கூடலே

காட்டில் உள்ள திருவேங்கடத்திலும் (திருப்பதி),நகரத்தில் உள்ள திருக்கண்ணபுரத்திலும் எவ்வித வருத்தமும் இன்றி, மகிழ்ந்து குடிகொண்டுள்ள வாமன அவதாரம் எடுத்த கண்ணன் ஓடி வந்து,என் கைப்பற்றி, தன்னை என்னோடு அணைத்துக் கொள்வானாகில் கூடிடு கூடலே

No comments:

Post a Comment