Monday, February 26, 2018

49- சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கை

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்
சதுரன் பொருத்த முடையன்
நாங்காளம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம்
நானு மவனு மறிதும்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர்  கோதும்
சிறுகுயி லேதிரு மாலை
ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றியாகில்
அவனை நான் செய்வன காணே

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்த முடையன்-வில்லை வளைத்து இழுக்கும் பலம் பொருந்திய கைகளையுடையவன்
நாங்காளம் இல்லிருந்து தொட்டியகச்சங்கம்-நாங்கள் இருவரும் எங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம்
நானும் அவனும் அறிதும்- நானும் அவனும் மட்டுமே அறிவோம்
தேங்கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறுகுயிலே-இனிமையான கனிகள் நிறைந்த மாந்தோப்பிலே செம்மையான (சிவப்பான)தளிர்களைக் கோதும் குயிலே
திருமாலை ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றியாகில்-திருமால் இருக்கும் இடம் சென்று அவரை என்னைவிரைந்து  வந்து சேரக் கூறுவாயாயெனில்
அவனை நான் செய்வன காணே-அவன் என்னைக் காணும் போது என்னச் செய்கிறேன் என்று பார்

(அவர் மட்டும் வரவில்லை என்றால்...என்ன செய்வேன்..என்று செல்ல மிரட்டல் விடுக்கிறாள்)
வில்லை வளைத்து இழுக்கும் பலம் பொருந்திய கைகளை உடையவன், அவனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை , நானும், அவனும் மட்டுமெ அறிவோம்.இனிமையான கனிகள் நிறைந்த மாந்தோப்பினில், சிவந்த தளிர்களை கோதும் குயிலே! திருமால் இருக்கும் இடம் சென்று உடன் விரைந்து இங்கு வந்து என்னைப் பார்க்கசொல்.அவர் வரட்டும், என்ன நடக்கிறது என்று பார்.(அவனுக்கு வைச்சிருக்கேன் என்று மிரட்டுவது போல கொஞ்சல்) 

No comments:

Post a Comment