Wednesday, February 7, 2018

4 - சுவரில் புராணநின் பேரேழுதி

சுவரில் புராணநின் பேரெழுதிச்
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்,
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா,
அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்,
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே.

சுவரில் புராணநின் பேரெழுதி - சுவரில் கண்ணனின் பெயரெழுதி
சுறவ நற் கொடிகளும்- மீன் கொடிகளும்
துரங்கங்களும்- குதிரைகளும்
கவரிப் பிணாக்களும்-கவரி கொண்டுசாமரம் வீசும் பெண்களும்
கருப்புவில்லும்-கரும்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா-எல்லாம் உனக்காக வரைந்தேன் காமதேவா
அவரைப் பிராயந் தொடங்கி- அவரை சிறு வயது முதலில் இருந்தே
என்றும்- என்றும்
ஆதரித் தெழுந்தாவென் தடமுலைகள்-  விரும்பி என் கொங்கைகள்
துவரைப் பிரானுக்கே- துவாரகை மன்னனான கண்ணனுக்கே
சங்கற்பித்து-உரியது
தொழுது வைத்தேன்-என்று வேண்டி வைத்தேன்
எல்லை விதிக்கிற்றியே- இதை விரைவாகச் செய்து என்னை அவருக்கே ஆட்படச் செய்வாயாக



மன்மதனே! சுவரிலே உன் பெயர்களை எழுதி, மீன் கள், குதிரைகள்,மற்றும் சாமரம் வீசும் பெண்கள், கரும்பு வில் என அனைத்தையும் உனக்காகக் காட்டிக் கொடுத்தேன்.இளம்பருவம் முதல் எப்போதும் துவராகாதிபதி கண்ணனை விரும்பி வளர்ந்த என் கொங்கைகள் அவனுக்கே உரியது.அதை விரைவாகச் செய்து என்னை ஆட்கொள்ள வைப்பாயாக

No comments:

Post a Comment