Tuesday, February 13, 2018

15- வெள்ளைநுண்மணல்

வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில்
விசித்திரப்பட, வீதிவாய்த்
தெள்ளிநாங்க ளிழைத்தகோல
மழித்தியாகிலும், உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால்
உரோடமொன்று மிலோங்கண்டாய்
கள்ளமாதவா: கேசவா! உன்
முகத்தன கண்க ளல்லவே!

வெள்ளை நுண்மணல் கொண்டு - வெள்ளிய நுண் கோலப்பொடி கொண்டு
சிறிய இல் விசித்திரப்பட- சிறு வீடு அழகாக ,பார்த்தாலே தனியாகத் தெரியும்படி
வீதிவாய்த் தெள்ளி- வீதியில் நீர் தெளித்து
நாங்கள் இழைத்த கோலம் அழுத்தியாகிலும்-நாங்கள் இட்ட கோலத்தை நீ அழித்து சேட்டை செய்தாலும்
உன்றன்மேல் உள்ளம் ஓடி உருகல் அல்லால்- உன் மேல் எங்கள் சிந்தனைஓடி உருகவே செய்கின்றதேத் தவிர
உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய்-வேறு உன் மீது கோபம் இல்லை பார்த்துகொள்
கள்ள மாதவா கேசவா- திருட்டு மாதவா கேசவா
உன் முகத்தின கண்கள் அல்லவே- உன் கண்களால் அள்ளிக் கொண்டால் எங்கள் வீட்டை அழிக்க மனம் வராது

வெள்ளை நுண் கோலப்பொடி கொண்டு, கோலம் போட்டு, சிறிய வீடு அழகாக, வீதியில் நீர் தெளித்து, நாங்கள் பார்த்துப் பார்த்து போட்ட கோலத்தை நீ அழித்து, அழிச்சாட்டியம் செய்தாலும், உன் மீது மட்டுமே மனம் செல்கிறது.உன்னை நினைத்து உருகுகிறது.அதைத்தவிர உன் மீது எங்களுக்குக் கோபம் இல்லை என்பதை உணர்ந்து கொள்வாயாகதிருட்டு கேசவா  மாதவா! (என செல்லமாக திட்டுகிறார்)

No comments:

Post a Comment