Thursday, February 22, 2018

35- மாடமாளிகை சூழ்

மாட மாளிகை  சூழ்மது ரைப்பதி
நாடி நந்தெரு வின்நடு வேவந்திட்டு
ஓடை மாமத யானை யுதைத்தவன்
கூட மாகில் நீ கூடிடு கூடலே.

மாட மாளிகை சூழ் மதுரைப்பதி- மாட மாளிகைகள் சூழ்ந்த மதுராபதியின் வேந்தன்
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு- நம்மை நாடி நம் தெருவில் வருகையில்
ஓடை மாமத யானை உதைத்தவன்-மதம் பிடித்து (நம்மை நாடி வந்த) ஓடி வந்த யானையை உதைத்தவன்
கூடுமாகில்-என்னை வந்து கூடுவான் எனில்
நீ கூடிடு கூடலே- நீ கூடிடு கூடலே

மாடமாளிகைகள் சூழ்ந்த மதுரா நகரம்(வடக்கிலுள்ளது) அதிபதி வேந்தன் நம்மை நாடி தெருவில் வருகையில் மதம் பிடித்து ஓடிவந்த குவலிய பீடம் என்ற யானையை எட்டி உதைத்து அடக்கியவன் என்னை வந்து கூடுவான் எனில் கூடிடு கூடலே

(மதுரா, கண்ணன் பிறந்த ஊராகக் கருதப்படுகிறது.கண்ணன் நம்மை நாடி தெருவில் வருகின்றானாம்.எதற்கு எனில், நம்மைத் துரத்தும் மதயானையிடமிருந்து நம்மைக் காக்க)

No comments:

Post a Comment