முல்லைப் பிராட்டி நீயுன்
முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியே லாழிநங்க்
காய் உன்ன டைக்கலம்
கொல்லை யரக்கியை மூக்கரிந்
திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால்
நானும் பிறந்தமை பொய்யன்றே
முல்லை பிராட்டி- முல்லை பிராட்டியே
நீயுன் முறுவல்கல் கொண்டு எம்மை அல்லல் விளைவியே- நீ உன் புன்முறுவல்கள் கொண்டு (எனக்கு) அல்லல் விளைவிக்காதே
ஆழி நங்காய் உன் அடைக்கலம்-சக்கரப் பொறி கொண்ட நங்கையே ! உன் (அவனையே) அடைக்கலம் என்றிருந்தேன்
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட-அரக்கி சூர்ப்பனகையின் மூக்கை அரிந்திட்ட
குமரனார்- குமரனார்
சொல்லும் பொய்யானால்- சொல் பொய்யாகுமேயானால்
நான் பிறந்தமை பொய்யன்றே- நான் பிறந்தது பொய் என ஆகிவிடும்
(சூர்ப்பனகையின் மூக்கை அரிந்தது லட்சுமணன்.ஆனால் சொன்னது ராமன் என்ற எண்ணத்தால் அவரின் மீது பழிபோடுகிறாள்)
முல்லை மலரே! நீ உன் புன்முறு வலால் எனக்கு அல்லல் விளைவிக்கிராய்.சக்கரப்போரி கொண்ட நங்கையே! அடைக்கலம் என்றிருந்த என்னை, அரக்கி சூர்ப்பனகையின் மூக்கை அரிந்திட்ட குமாரனார் (வந்து சேராததால்) அவர் சொல் பொய்யாகுமேயாயின், நான் பிறந்ததும் பொய் என ஆகிவிடும்.
முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியே லாழிநங்க்
காய் உன்ன டைக்கலம்
கொல்லை யரக்கியை மூக்கரிந்
திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால்
நானும் பிறந்தமை பொய்யன்றே
முல்லை பிராட்டி- முல்லை பிராட்டியே
நீயுன் முறுவல்கல் கொண்டு எம்மை அல்லல் விளைவியே- நீ உன் புன்முறுவல்கள் கொண்டு (எனக்கு) அல்லல் விளைவிக்காதே
ஆழி நங்காய் உன் அடைக்கலம்-சக்கரப் பொறி கொண்ட நங்கையே ! உன் (அவனையே) அடைக்கலம் என்றிருந்தேன்
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட-அரக்கி சூர்ப்பனகையின் மூக்கை அரிந்திட்ட
குமரனார்- குமரனார்
சொல்லும் பொய்யானால்- சொல் பொய்யாகுமேயானால்
நான் பிறந்தமை பொய்யன்றே- நான் பிறந்தது பொய் என ஆகிவிடும்
(சூர்ப்பனகையின் மூக்கை அரிந்தது லட்சுமணன்.ஆனால் சொன்னது ராமன் என்ற எண்ணத்தால் அவரின் மீது பழிபோடுகிறாள்)
முல்லை மலரே! நீ உன் புன்முறு வலால் எனக்கு அல்லல் விளைவிக்கிராய்.சக்கரப்போரி கொண்ட நங்கையே! அடைக்கலம் என்றிருந்த என்னை, அரக்கி சூர்ப்பனகையின் மூக்கை அரிந்திட்ட குமாரனார் (வந்து சேராததால்) அவர் சொல் பொய்யாகுமேயாயின், நான் பிறந்ததும் பொய் என ஆகிவிடும்.
No comments:
Post a Comment