ஆரே யுலகத் தாற்றுவார்
ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரே றுழக்க வழக்குண்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆரா வமுத மனையான்றன்
அமுத வாயிலூறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி யிளைப்பை நீக்கீரே
ஆரே உலகத்து ஆற்றுவார் - இந்த உலகத்தில் யார் என்னை ஆற்றுவார்கள்
ஆயர் பாடி கவர்ந்து உண்ணும் - ஆயர் பாடி முழுவதும் கவர்ந்து,அவர் மனம் கொள்ளை கொண்டிருக்கும்
காரேறுழக்க வழக்குண்டு - கரிய நிறத்துக் காளை என்னை வருத்த, அதனால் வருந்தி கொண்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை - தளர்ந்தும் முறிந்தும் கிடப்பவளை
ஆராவமுத மனையாறான் - என்னவன் ஆராவமுதனின்
அமுத வாயில் ஊறிய நீர் தான் கொணர்ந்து புலராமே - அமுத வாயில் ஊறிய நீரினை கொண்டு வந்து நான் தெளிய
பருக்கி இளைப்பை நீக்கீரே - அதைப் பருகத் துணை புரிந்து என் இளைப்பைப் போக்குங்களேன்
ஆயர்பாடி முழுதும் கவர்ந்து,கரிய நிறத்துக் காளை, அவர் மனம் கொள்ளைக் கொண்டிருக்கும் , தளர்ந்து, முறிந்தும் கிடக்கும் என்னை இவ்வுலகில் ஆற்றுவார் யாரும் இல்லையே!என்னவன் ஆராவமுதனின், அமுத வாயில் ஊறிய நீரினை கொணர்ந்து நான் தெளிய எனக்குக் கொடுத்து எனது இளைப்பைப் போக்குங்களேன்
ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரே றுழக்க வழக்குண்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆரா வமுத மனையான்றன்
அமுத வாயிலூறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி யிளைப்பை நீக்கீரே
ஆரே உலகத்து ஆற்றுவார் - இந்த உலகத்தில் யார் என்னை ஆற்றுவார்கள்
ஆயர் பாடி கவர்ந்து உண்ணும் - ஆயர் பாடி முழுவதும் கவர்ந்து,அவர் மனம் கொள்ளை கொண்டிருக்கும்
காரேறுழக்க வழக்குண்டு - கரிய நிறத்துக் காளை என்னை வருத்த, அதனால் வருந்தி கொண்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை - தளர்ந்தும் முறிந்தும் கிடப்பவளை
ஆராவமுத மனையாறான் - என்னவன் ஆராவமுதனின்
அமுத வாயில் ஊறிய நீர் தான் கொணர்ந்து புலராமே - அமுத வாயில் ஊறிய நீரினை கொண்டு வந்து நான் தெளிய
பருக்கி இளைப்பை நீக்கீரே - அதைப் பருகத் துணை புரிந்து என் இளைப்பைப் போக்குங்களேன்
ஆயர்பாடி முழுதும் கவர்ந்து,கரிய நிறத்துக் காளை, அவர் மனம் கொள்ளைக் கொண்டிருக்கும் , தளர்ந்து, முறிந்தும் கிடக்கும் என்னை இவ்வுலகில் ஆற்றுவார் யாரும் இல்லையே!என்னவன் ஆராவமுதனின், அமுத வாயில் ஊறிய நீரினை கொணர்ந்து நான் தெளிய எனக்குக் கொடுத்து எனது இளைப்பைப் போக்குங்களேன்
No comments:
Post a Comment