கண்ணனென்னும் கருந்தெய்வம்
காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய் தாற்போலப்
புறநின் றழகு பேசாதே
பெண்ணின் வருத்த மறியாத
பெருமானரையில் பீதக
வண்ன ஆடைகொண்டு என்னை
வாட்டம் தணிய வீசீரே
கண்ணனென்னும் கருந்தெய்வம் - கண்ணன் என்னும் கருமை நிறத் தெய்வம்
காட்சிப் பழகிக் கிடப்பேனை - அவனைக் கண்டு, கற்பனையிலேயேவாழ்ந்து (அதிலேயே சுகம் கண்டு)பழகிக் கிடப்பவளை
புண்ணில் புளிப்பு எய்தாற் போலப் புறம் நின்று அழகு பேசாதே - நீங்களோ என் புறம் நின்று புண்ணில் புளிப்பு எய்தது போலப் புறம் பேசி அழகுக் காட்டாது
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் - பெண்ணின் வேதனை வருத்தங்கள் அறியாத அந்தப் பெருமானின் இடையிலே
பீதக வண்ண ஆடை கொண்டு - அணிந்திருக்கும் மஞ்சள் பட்டாடைக் கொண்டு
என்னை வாட்டம் தணிய வீசீரே - என் வேதனையை / வாட்டத்தை தீர (அதனை)என் மீது வீசுவீர்களாக
கண்ணன் எனும் கருமைநி றத் தெய்வத்துடன் வாழ்ந்து வருவது போல கற்பனையில் பழகிக் கொண்ட என்னைப் பற்றி, புண்ணில் புளிப்பு எய்தது போல புறம் பேசாமல், அந்தக் கண்ணனின் இடையிலே அணிந்திருக்கும் பட்டாடையை எடுத்து சாமரமாக எனக்கு வீசி என் வேதனையைத் தீர்ப்பீர்களாக
காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய் தாற்போலப்
புறநின் றழகு பேசாதே
பெண்ணின் வருத்த மறியாத
பெருமானரையில் பீதக
வண்ன ஆடைகொண்டு என்னை
வாட்டம் தணிய வீசீரே
கண்ணனென்னும் கருந்தெய்வம் - கண்ணன் என்னும் கருமை நிறத் தெய்வம்
காட்சிப் பழகிக் கிடப்பேனை - அவனைக் கண்டு, கற்பனையிலேயேவாழ்ந்து (அதிலேயே சுகம் கண்டு)பழகிக் கிடப்பவளை
புண்ணில் புளிப்பு எய்தாற் போலப் புறம் நின்று அழகு பேசாதே - நீங்களோ என் புறம் நின்று புண்ணில் புளிப்பு எய்தது போலப் புறம் பேசி அழகுக் காட்டாது
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் - பெண்ணின் வேதனை வருத்தங்கள் அறியாத அந்தப் பெருமானின் இடையிலே
பீதக வண்ண ஆடை கொண்டு - அணிந்திருக்கும் மஞ்சள் பட்டாடைக் கொண்டு
என்னை வாட்டம் தணிய வீசீரே - என் வேதனையை / வாட்டத்தை தீர (அதனை)என் மீது வீசுவீர்களாக
கண்ணன் எனும் கருமைநி றத் தெய்வத்துடன் வாழ்ந்து வருவது போல கற்பனையில் பழகிக் கொண்ட என்னைப் பற்றி, புண்ணில் புளிப்பு எய்தது போல புறம் பேசாமல், அந்தக் கண்ணனின் இடையிலே அணிந்திருக்கும் பட்டாடையை எடுத்து சாமரமாக எனக்கு வீசி என் வேதனையைத் தீர்ப்பீர்களாக
No comments:
Post a Comment