குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதிவ லம்செய்து மணநீர்
அங்கவ னோடுமு டஞ்சென்றங்கானைமேல்
மஞ்சன மாட்டக் கனாக்கண்டேன் தோழீ
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து- உடல்முழுதும் குங்குமம் அப்பிக் குளிர்ச்சியான சந்தனமும் பூசி
மங்கல விதி வலம் செய்து மணநீர்-(தோரணம் கட்டப்பட்ட) மங்கலகரமான வீதிகளில் வலம் வந்து ,நறுமணம் கொண்ட (வாசனைத் திரவியங்கள் சேர்த்த) நீரினைக் கொண்டு
அங்கவனோடி உடன் சென்று அங்கு ஆனை மேல்-காண்ணுடன் சேர்ந்து யானைனின் மீது ஏறி வலம் வந்தபோது
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ-எங்களுக்கு மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ
உடல் முழுதும் குங்குமம் அப்பி, குளிர்ச்சியான சந்தனமும் பூசி , கண்ணனுடன் யானை மீது ஏறி (தோரணங்கள் கட்டிய) மங்கல வீதியில் வலம் வந்த போது,நறுமணம் கலந்த நீரினைக் கொண்டு திருமஞ்சனம் செய்வது போலக் கனாக் கண்டேன் தோழீ
(திருமஞ்சனம் என்பது அபிஷேகம்.வைணவத்தலங்களில் திருமஞ்சனம் எனப்படுகிறது)
மங்கல வீதிவ லம்செய்து மணநீர்
அங்கவ னோடுமு டஞ்சென்றங்கானைமேல்
மஞ்சன மாட்டக் கனாக்கண்டேன் தோழீ
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து- உடல்முழுதும் குங்குமம் அப்பிக் குளிர்ச்சியான சந்தனமும் பூசி
மங்கல விதி வலம் செய்து மணநீர்-(தோரணம் கட்டப்பட்ட) மங்கலகரமான வீதிகளில் வலம் வந்து ,நறுமணம் கொண்ட (வாசனைத் திரவியங்கள் சேர்த்த) நீரினைக் கொண்டு
அங்கவனோடி உடன் சென்று அங்கு ஆனை மேல்-காண்ணுடன் சேர்ந்து யானைனின் மீது ஏறி வலம் வந்தபோது
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ-எங்களுக்கு மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ
உடல் முழுதும் குங்குமம் அப்பி, குளிர்ச்சியான சந்தனமும் பூசி , கண்ணனுடன் யானை மீது ஏறி (தோரணங்கள் கட்டிய) மங்கல வீதியில் வலம் வந்த போது,நறுமணம் கலந்த நீரினைக் கொண்டு திருமஞ்சனம் செய்வது போலக் கனாக் கண்டேன் தோழீ
(திருமஞ்சனம் என்பது அபிஷேகம்.வைணவத்தலங்களில் திருமஞ்சனம் எனப்படுகிறது)
No comments:
Post a Comment