(பத்தாம் பத்து ஆரம்பம்.பூவை இந்தப் பாடல்களில் பூக்களிடம் நியாயம் கேட்கிறாள்)..
கார்க்கோடல் பூக்காள்!.
கார்க்கடல் வண்ணனென் மேலும்மைப்
போர்க்கோலம் செய்து போர்
விடுத்தவனெங்குற்றான்
ஆர்க்கோ இனிநாம் பூசலிடுவது
அணிதுழாய்த் தார்கோடும் நெஞ்சந்
தன்னைப் படைகவல் லேனந்தோ
கார்க்கோடல் பூக்காள்-கருங்காந்தள் பூக்களே
கார்க்கடல் வண்ணனென் மேல் உம்மை-கருமையானக் க டலின் வண்ணன் என்மேல் உங்களை
போர்க்கோலம் செய்து போர் விடுவித்தவன் எங்குற்றான்-போர்க்கோலம் செய்து ஏவியன் எங்கு சென்றான்
ஆர்க்கோ இனி நாம் பூசலிடுவது-இனி நாம் வழக்காடுவது முறையோ
அணித் துழாய்த் தார்க்கு ஓடும்- அழகிய துளசி மாலைக்கு ஓடும்
நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ=என் நெஞ்சத்தை தடுக்க முடியாதவள் ஆகிப்போனேன்...அந்தோ
(அந்தோ...பரிதாபம் என் கிறோம் அல்லவா?அது போல தன் மீது தானே இரக்கம் கொள்கிறாளாம்)
கருங்காந்தல் பூக்களே!கருமையானக் கடலின் வண்ணன் என் மேல் உங்களை போர்க்கோலம் செய்து ஏவியவன் எங்கு போனான். இனி நாம் சண்டைடிய்யுக் கொள்வது முறையல்ல.
அழகிய துளசி மாலை (அணிந்தவனை) நோக்கி ஓடும், என் நெஞ்சத்தைத் தடுக்க முடியாதவள் ஆகிப் போனேன்.அந்தோ (பாவம் அல்லவா நான்?)
கார்க்கோடல் பூக்காள்!.
கார்க்கடல் வண்ணனென் மேலும்மைப்
போர்க்கோலம் செய்து போர்
விடுத்தவனெங்குற்றான்
ஆர்க்கோ இனிநாம் பூசலிடுவது
அணிதுழாய்த் தார்கோடும் நெஞ்சந்
தன்னைப் படைகவல் லேனந்தோ
கார்க்கோடல் பூக்காள்-கருங்காந்தள் பூக்களே
கார்க்கடல் வண்ணனென் மேல் உம்மை-கருமையானக் க டலின் வண்ணன் என்மேல் உங்களை
போர்க்கோலம் செய்து போர் விடுவித்தவன் எங்குற்றான்-போர்க்கோலம் செய்து ஏவியன் எங்கு சென்றான்
ஆர்க்கோ இனி நாம் பூசலிடுவது-இனி நாம் வழக்காடுவது முறையோ
அணித் துழாய்த் தார்க்கு ஓடும்- அழகிய துளசி மாலைக்கு ஓடும்
நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ=என் நெஞ்சத்தை தடுக்க முடியாதவள் ஆகிப்போனேன்...அந்தோ
(அந்தோ...பரிதாபம் என் கிறோம் அல்லவா?அது போல தன் மீது தானே இரக்கம் கொள்கிறாளாம்)
கருங்காந்தல் பூக்களே!கருமையானக் கடலின் வண்ணன் என் மேல் உங்களை போர்க்கோலம் செய்து ஏவியவன் எங்கு போனான். இனி நாம் சண்டைடிய்யுக் கொள்வது முறையல்ல.
அழகிய துளசி மாலை (அணிந்தவனை) நோக்கி ஓடும், என் நெஞ்சத்தைத் தடுக்க முடியாதவள் ஆகிப் போனேன்.அந்தோ (பாவம் அல்லவா நான்?)
No comments:
Post a Comment