இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்
ஒன்றுநூ றாயிரமாக் கொடுத்தப் பின்னும் ஆளும்செய்வன்
தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்ற பிரானடியேன் மனத்தே வந்து நேர்படிலே
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் -இன்று வந்து இத்தனையும் சாப்பிட்டுவிட்டால்
நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்தப் பின்னும் ஆளும் செய்வன்- நான் ஒன்றுக்கு நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் அவனை ஆட்செய்வேன்
தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள்- தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னிலே
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே- நின்ற பிரான் அடியவளாகிய எனது மனதிலே வந்து நின்றாய்
(சென்ற பாடலில் சொன்னவற்றை) இன்று வந்து இத்தனையையும் சாப்பிட்டுவிட்டால்,நான் ஒன்றுக்கு நூறாயிரமாகக் கொடுத்து(இன்னமும் செய்வேன்) பின்னும் ஆட்செய்வேன்.தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னிலே நின்ற பிரான், அடியவளாகிய என் மனதிலே வந்து நின்றாய்
No comments:
Post a Comment