பாசிதுர்த் துக்கிடந்த பார்மகட்கு பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்
தேகடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் போர்க்கவும் பேராவே
பாசி தூர்த்துக் கிடந்த பார் மகட்கு பண்டொருநாள்- முன்பு ஒருநாள் பசுமை நிறைந்து கிடந்த நிலமகளுக்காக
மாசு உடம்பில் நீர் வார மானமிலாப் பன்றியாம் - அழுக்கேறிய உடம்பில் நீர் ஒழுக மானம் இல்லாத பன்றியாக உருவெடுத்த
தேகடைய தேவர் திருவரங்கச் செல்வனார் - ஒளியுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி இருப்பனகள் போர்க்கவும் பேராவே - என்னிடம் முன்பு பேசியவற்றை என் மனதில் இருந்து நீக்க முயன்றும் முடியவில்லையே!
பசுமை நிறைந்து கிடந்த நிலமகளுக்காக , அழுக்கேறிய உடம்பில் நீர் ஒழுக மானம் இல்லா பன்றியாய் அவதாரம் எடுத்த, திருவரங்கச் செல்வனார், என்னிடம் முன்பு பேசியவ ற்றையெல்லாம் என் மனதில் இருந்து நீக்க முயன்றும்..அது முடியவில்லையே (என பிதற்றுகிறாள்)
(ஆமாம்..அவர் எப்பொது, இவளிடம் என்னவெல்லாம் பேசினார்....எல்லாம் அவளது கற்பனை உலகில் பேசியவை)
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்
தேகடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் போர்க்கவும் பேராவே
பாசி தூர்த்துக் கிடந்த பார் மகட்கு பண்டொருநாள்- முன்பு ஒருநாள் பசுமை நிறைந்து கிடந்த நிலமகளுக்காக
மாசு உடம்பில் நீர் வார மானமிலாப் பன்றியாம் - அழுக்கேறிய உடம்பில் நீர் ஒழுக மானம் இல்லாத பன்றியாக உருவெடுத்த
தேகடைய தேவர் திருவரங்கச் செல்வனார் - ஒளியுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி இருப்பனகள் போர்க்கவும் பேராவே - என்னிடம் முன்பு பேசியவற்றை என் மனதில் இருந்து நீக்க முயன்றும் முடியவில்லையே!
பசுமை நிறைந்து கிடந்த நிலமகளுக்காக , அழுக்கேறிய உடம்பில் நீர் ஒழுக மானம் இல்லா பன்றியாய் அவதாரம் எடுத்த, திருவரங்கச் செல்வனார், என்னிடம் முன்பு பேசியவ ற்றையெல்லாம் என் மனதில் இருந்து நீக்க முயன்றும்..அது முடியவில்லையே (என பிதற்றுகிறாள்)
(ஆமாம்..அவர் எப்பொது, இவளிடம் என்னவெல்லாம் பேசினார்....எல்லாம் அவளது கற்பனை உலகில் பேசியவை)
No comments:
Post a Comment