(நாச்சியார் திருமொழி ஏழாம் பத்து ஆரம்பம்.கடலில் பிறந்த வெண்சங்கு கண்ணனின் கையில் எப்போதும் காணப்படுவதால், எழுந்த பொறாமையால் பாடியவை)
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும்நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ-பச்சைக்கருப்பூரம் மணக்குமோ அல்லது தாமரைப்பூவின் மணம் வருமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ-(கண்ணனின்)பவளம் போன்ற சிவந்த வாய்தான் இனிமையாய் இருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்-குவலய பீடம் என்னும் யானையின் கொம்பை உடைத்த மாதவனின் வாயும், சுவையும், அதன்மணமும் எப்படி இருக்கும் என
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே-வேண்டி விரும்பிக் கேட்கின்றேன், அதைச் சொல்லிவிடு கடல் வெண்சங்கே
பச்சைக் கருப்பூரம் போன்ற மணமா அல்லது தாமரைப் பூவின் மணமா? பவளம் போன்ற செவ்வாய் இனிப்பாக இருக்குமா?குவலிய பீடம் என்ற யானையின் தந்தத்தினை உடைத்த மாதவனின் வாயும், சுவையும் எப்படி இருக்குமென (அவருடனேயே இருக்கும், அவர் ஊதுகையில் அவர் இதழின் சுவை அறிந்த) உன்னை விருப்பிக் கேட்கி ன்றேன் சொல்லிடு
சங்கே!
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும்நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ-பச்சைக்கருப்பூரம் மணக்குமோ அல்லது தாமரைப்பூவின் மணம் வருமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ-(கண்ணனின்)பவளம் போன்ற சிவந்த வாய்தான் இனிமையாய் இருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்-குவலய பீடம் என்னும் யானையின் கொம்பை உடைத்த மாதவனின் வாயும், சுவையும், அதன்மணமும் எப்படி இருக்கும் என
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே-வேண்டி விரும்பிக் கேட்கின்றேன், அதைச் சொல்லிவிடு கடல் வெண்சங்கே
பச்சைக் கருப்பூரம் போன்ற மணமா அல்லது தாமரைப் பூவின் மணமா? பவளம் போன்ற செவ்வாய் இனிப்பாக இருக்குமா?குவலிய பீடம் என்ற யானையின் தந்தத்தினை உடைத்த மாதவனின் வாயும், சுவையும் எப்படி இருக்குமென (அவருடனேயே இருக்கும், அவர் ஊதுகையில் அவர் இதழின் சுவை அறிந்த) உன்னை விருப்பிக் கேட்கி ன்றேன் சொல்லிடு
சங்கே!
மிக்க நன்று
ReplyDelete