ஆர்க்குமென் நோயி தறியலாகா
தம்மனை மீர்தூழ திப்படாதே
கார்க்கடல் வண்ணனென் பானொருவன்
கைகண்ட யோகம் தடவத்தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பையேறிக்
காளியனுச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்கள மாக நிருத்தஞ்செய்த
பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்
ஆர்க்கும் என் நோய் அறியலாகாது - யாருக்கும் என் நோய் தெரிந்திருக்க நியாயம் இல்லை
அம்மனைமீர் துழதிப்படாதெ - தாய்மார்களே! உங்கள் உடல் வலி/பயணத் துன்பம் பற்றி பொருட்படுத்தாமல்
கார்க்கடல் வண்னன் என்பான் ஒருவன் - கடல் வண்ண நிறம் உள்ள ஒருவன்
கை கண்ட யோகம் தடவத்திரும் - என் உடல் அவன் தொட்ட யோகம் , அவன் தடவினால் என் நோய் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறி - குளக்கரையில் நின்ற கடம்ப மரம் ஏறி
காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து - காளியன் என்ற பாம்பின் உச்சந்தலையில் எறி நடனமாடி
போர்க்களமாக நிருத்தஞ் செய்த- போர்க்களமாக அதனை நொறுக்கச் செய்த
பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின் - அந்த பொய்கையின் கரையில் என்னை கொண்டு விட்டு விடுங்கள்
யாருக்கும் என் நோய் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை., கடல் வண்ணநிறம் உள்ள ஒருவன், என் உடல் தொட்டு, தடவினால் என் நோய் தீரும்.குளக்கரையில் நின்ற கடம்ப மரம் ஏறி, காளியன் என்ற பாம்பின் உச்சந்தலையில் ஏறி நடனமாடி, போர்க்களமாக அதனை நொறுக்கச் செய்த, அந்த பொய்கையின் கரையில் , தாய்மார்களே ! நீங்கள் உங்கள் உடல் வலி, என்னுடன் பயணிப்பதால் ஏற்படப்போகும் பயண வலி ஆகியவற்றை பொருட்படுத்தாது, என்னைக் கொண்டு விட்டு விடுங்களேன்
தம்மனை மீர்தூழ திப்படாதே
கார்க்கடல் வண்ணனென் பானொருவன்
கைகண்ட யோகம் தடவத்தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பையேறிக்
காளியனுச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்கள மாக நிருத்தஞ்செய்த
பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்
ஆர்க்கும் என் நோய் அறியலாகாது - யாருக்கும் என் நோய் தெரிந்திருக்க நியாயம் இல்லை
அம்மனைமீர் துழதிப்படாதெ - தாய்மார்களே! உங்கள் உடல் வலி/பயணத் துன்பம் பற்றி பொருட்படுத்தாமல்
கார்க்கடல் வண்னன் என்பான் ஒருவன் - கடல் வண்ண நிறம் உள்ள ஒருவன்
கை கண்ட யோகம் தடவத்திரும் - என் உடல் அவன் தொட்ட யோகம் , அவன் தடவினால் என் நோய் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறி - குளக்கரையில் நின்ற கடம்ப மரம் ஏறி
காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து - காளியன் என்ற பாம்பின் உச்சந்தலையில் எறி நடனமாடி
போர்க்களமாக நிருத்தஞ் செய்த- போர்க்களமாக அதனை நொறுக்கச் செய்த
பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின் - அந்த பொய்கையின் கரையில் என்னை கொண்டு விட்டு விடுங்கள்
யாருக்கும் என் நோய் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை., கடல் வண்ணநிறம் உள்ள ஒருவன், என் உடல் தொட்டு, தடவினால் என் நோய் தீரும்.குளக்கரையில் நின்ற கடம்ப மரம் ஏறி, காளியன் என்ற பாம்பின் உச்சந்தலையில் ஏறி நடனமாடி, போர்க்களமாக அதனை நொறுக்கச் செய்த, அந்த பொய்கையின் கரையில் , தாய்மார்களே ! நீங்கள் உங்கள் உடல் வலி, என்னுடன் பயணிப்பதால் ஏற்படப்போகும் பயண வலி ஆகியவற்றை பொருட்படுத்தாது, என்னைக் கொண்டு விட்டு விடுங்களேன்
No comments:
Post a Comment