செங்கமல நாண்மலர்மேல் தேனுகருமன்னம் போல
செங்கட்க ருமேனி வாசுதே வனுடைய
அங்கைத்த லமேறி அன்னவ சஞ்செய்யும்
சங்கரையா உஞ்செல்வம் சாலவ ழகியதே
செங்கமல நான் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல- அன்று மலர்ந்த சிவந்த தாமரை மலர்மேல் தேன் நுகரும் அன்னத்தைப் போல
செங்கட்கருமேனி வாசுதேவனுடைய-சிவந்த கண்களும்,கருத்த மேனியும் கொண்ட வாசுதேவனுடைய
அங்கைத்தலம் ஏறி அன்னவசம் செய்யும்- அழகிய கைத்தலம் ஏறி அங்கே கண் வளரும்
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே- சங்குகளின் தலைவா!உன் செல்வம் மிகவும் அழகியதே
அன்றலர்ந்த தாமரை மலர்மீது தேன் அருந்தும் அன்னம் போல, சிவந்த கண்களும்,கருத்த மேனியும் கொண்ட வாசுதேவனின் அழகிய கைத்தலம் ஏறி (சிவந்த இதழ்களில் உள்ள வாய் அமுதத்தைப் பருகி) அங்கே கண் வளரும் (உறங்கும்) சங்குகளின் அரசனெ! உனக்குக் கிடைத்த இந்த செல்வம் அழகியதே
செங்கட்க ருமேனி வாசுதே வனுடைய
அங்கைத்த லமேறி அன்னவ சஞ்செய்யும்
சங்கரையா உஞ்செல்வம் சாலவ ழகியதே
செங்கமல நான் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல- அன்று மலர்ந்த சிவந்த தாமரை மலர்மேல் தேன் நுகரும் அன்னத்தைப் போல
செங்கட்கருமேனி வாசுதேவனுடைய-சிவந்த கண்களும்,கருத்த மேனியும் கொண்ட வாசுதேவனுடைய
அங்கைத்தலம் ஏறி அன்னவசம் செய்யும்- அழகிய கைத்தலம் ஏறி அங்கே கண் வளரும்
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே- சங்குகளின் தலைவா!உன் செல்வம் மிகவும் அழகியதே
அன்றலர்ந்த தாமரை மலர்மீது தேன் அருந்தும் அன்னம் போல, சிவந்த கண்களும்,கருத்த மேனியும் கொண்ட வாசுதேவனின் அழகிய கைத்தலம் ஏறி (சிவந்த இதழ்களில் உள்ள வாய் அமுதத்தைப் பருகி) அங்கே கண் வளரும் (உறங்கும்) சங்குகளின் அரசனெ! உனக்குக் கிடைத்த இந்த செல்வம் அழகியதே
No comments:
Post a Comment