கூட்டிலிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா கோவிந்தா வென்றழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பானாகில்
உலகள ந்தானென்றுயரக்கூவும்
நாட்டிற்றலைப் பழியெய்தி
உங்கள் நன்மையழிந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவராப்பதிக்கென்னை யுய்த்திடுமின்
கூட்டிலிருந்து கிளி எப்போதும் - கூட்டில் இருந்த கிளி எப்போதும்
கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும் - கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பானாகில் - உணவுக் கொடாமல் நான் வெறுத்து தனித்தேனெனில்
உலகளந்தான் என்று உயரக் கூவும் - உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் இற்றலைப் பழியெய்தி - நாட்டிலே இப்படி பெரிய பழியை அடைந்து
உங்கள் நன்மை யழிந்து தலையிடாதே - உங்கள் நல்ல பெயர் அழிந்து தலை கவிழ நேராது
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராப்பதிக்கே - உயர்ந்த மாடங்கள் சூழ இருக்கும்
என்னை யுய்த்தியுமின் - என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்
கூட்டில் இருந்த கிளி எப்போதும், கோவிந்தா, கோவிந்தா என்றே கூவும்.உணவுக் கொடுக்காமல் நான் இருந்தால், உலகளந்தான் என உயரக் கூவும்.இப்படி ஒரு பழியை ஏற்று உங்கள் நல்ல பெயர் அழிந்து, உங்கள் தலை கவிழாமல் இருக்க வேண்டுமானால், துவாரபதிக்கு என்னைக் கூட்டிச் சென்று விட்டுவிடுங்கள்
(இப்போது இப்பாடலை , கோதை, தன்னைக் கிளியாய் நினைத்துப் பாடியதாய் எண்ணிப் பாருங்கள்)
கோவிந்தா கோவிந்தா வென்றழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பானாகில்
உலகள ந்தானென்றுயரக்கூவும்
நாட்டிற்றலைப் பழியெய்தி
உங்கள் நன்மையழிந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவராப்பதிக்கென்னை யுய்த்திடுமின்
கூட்டிலிருந்து கிளி எப்போதும் - கூட்டில் இருந்த கிளி எப்போதும்
கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும் - கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பானாகில் - உணவுக் கொடாமல் நான் வெறுத்து தனித்தேனெனில்
உலகளந்தான் என்று உயரக் கூவும் - உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் இற்றலைப் பழியெய்தி - நாட்டிலே இப்படி பெரிய பழியை அடைந்து
உங்கள் நன்மை யழிந்து தலையிடாதே - உங்கள் நல்ல பெயர் அழிந்து தலை கவிழ நேராது
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராப்பதிக்கே - உயர்ந்த மாடங்கள் சூழ இருக்கும்
என்னை யுய்த்தியுமின் - என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்
கூட்டில் இருந்த கிளி எப்போதும், கோவிந்தா, கோவிந்தா என்றே கூவும்.உணவுக் கொடுக்காமல் நான் இருந்தால், உலகளந்தான் என உயரக் கூவும்.இப்படி ஒரு பழியை ஏற்று உங்கள் நல்ல பெயர் அழிந்து, உங்கள் தலை கவிழாமல் இருக்க வேண்டுமானால், துவாரபதிக்கு என்னைக் கூட்டிச் சென்று விட்டுவிடுங்கள்
(இப்போது இப்பாடலை , கோதை, தன்னைக் கிளியாய் நினைத்துப் பாடியதாய் எண்ணிப் பாருங்கள்)
No comments:
Post a Comment