மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்க ளுரைப்பான
இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே
மாலாய்ப் பிறந்த நம்பியை - கருமையாய் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை - மயக்கம் செய்யும் என் மணாளனை
ஏலாய் பொய்களுரைப்பான் - ஏற்றுக் கொள்ள முடியாத பல பொய்களை உரைப்பவனை
இங்கே போதக் கண்டீரே - இங்கே வரப் பார்த்தீர்களா
மேலால் பரந்த வெயில் காப்பான் - வெயில் உடலில் படாது காப்பவன்
வினதை சிறுவன் - வினதை என்ற பெண்ணின் மகனான கருடனின்
சிறகென்னும் மேலாப் பின் கீழ் வருவானை - மேலாக விரித்த சிறகின் அடியில் கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் பார்த்தோம்
கேள்வி - கருமையாய் பிறந்த நம்பி, என்னை மயக்கம் கொள்ள வைத்த என் மணாளன், ஏற்றுக் கொள்ள முடியா பல பொய்களை உரைப்பவன், இங்கே வரப் பார்த்தீர்களா?
பதில் - வினதை என்ற பெண்ணின் மகனான கருடன், மேலாக விரித்த சிறகின் கீழ், வெயில் உடலில் படாது வந்தவனை விருந்தாவனத்தில் கண்டோமே
(வினதை- கருடனின் தாய், காசிபர் - கருடனின் தந்தை, வினடஹி சிறுவன் - கருடன்)
கண்ணனுடன் கற்பனையில் வாழ்ந்தவள்.பல விதங்களிலும் வேண்டியும், பிரார்த்திதும், தூது அனுப்பியும் வராதவன்...ஆகவே இப்பாடல்கள் மூலம், பொய்யன், .வெண்ணெய் மணத்தவன் குட்டக்காளை என்றெல்லாம் அம்னம் போனபடி செல்லமாக திட்டுகிறாள்
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்க ளுரைப்பான
இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே
மாலாய்ப் பிறந்த நம்பியை - கருமையாய் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை - மயக்கம் செய்யும் என் மணாளனை
ஏலாய் பொய்களுரைப்பான் - ஏற்றுக் கொள்ள முடியாத பல பொய்களை உரைப்பவனை
இங்கே போதக் கண்டீரே - இங்கே வரப் பார்த்தீர்களா
மேலால் பரந்த வெயில் காப்பான் - வெயில் உடலில் படாது காப்பவன்
வினதை சிறுவன் - வினதை என்ற பெண்ணின் மகனான கருடனின்
சிறகென்னும் மேலாப் பின் கீழ் வருவானை - மேலாக விரித்த சிறகின் அடியில் கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் பார்த்தோம்
கேள்வி - கருமையாய் பிறந்த நம்பி, என்னை மயக்கம் கொள்ள வைத்த என் மணாளன், ஏற்றுக் கொள்ள முடியா பல பொய்களை உரைப்பவன், இங்கே வரப் பார்த்தீர்களா?
பதில் - வினதை என்ற பெண்ணின் மகனான கருடன், மேலாக விரித்த சிறகின் கீழ், வெயில் உடலில் படாது வந்தவனை விருந்தாவனத்தில் கண்டோமே
(வினதை- கருடனின் தாய், காசிபர் - கருடனின் தந்தை, வினடஹி சிறுவன் - கருடன்)
கண்ணனுடன் கற்பனையில் வாழ்ந்தவள்.பல விதங்களிலும் வேண்டியும், பிரார்த்திதும், தூது அனுப்பியும் வராதவன்...ஆகவே இப்பாடல்கள் மூலம், பொய்யன், .வெண்ணெய் மணத்தவன் குட்டக்காளை என்றெல்லாம் அம்னம் போனபடி செல்லமாக திட்டுகிறாள்
No comments:
Post a Comment