அங்கைத் தலைத்திடை யாழிகொண்டான்
அவன்முகத் தன்றி விழியேனென்று
செங்கச்சுக் கொண்டுகண்ணாடையார்த்துச்
சிறுமானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணிர்
கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை யொழியவேபோய்
யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்
அங்கைத் தலைத்திடை யாழிகொண்டான் - தமது அழகிய கைத்தலத்தில் சக்கரம் கொண்டவன்
அவன்முகத்தன்றி விழியேன் என்று - அவன் முகத்தைத் தவிர வேறு எதிலும் விழிக்க மாட்டேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண்ணாடையார்த்து- செந்திற ஆடையைக் கட்டிக் கொண்டு (மார்புக் கச்சை)
சிறுமானிடவரைக் காணில் நாணும் - (அந்தக் கண்ணனைத் தவிர) வேறு சிறு மானிடரை பார்க்கச் சகிக்காமல் வெட்கும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணிர்- என் கொங்கைகள் இருக்கும் இடத்தை நன் கு கவனியுங்கள்
கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா - கோவிந்தனுக்கு அல்லாமல் வேறு எவனுக்கும் உண்ணக் கொடுக்காது
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் - இவ்விடம் வாழ்வதை ஒழித்துப் போய்
யமுனைக் கரைகென்னை யுய்த்திடுமின் - யமுனைக் கரைக்குச் சென்று என்னை (அவனுடன்) சேர்த்து விடுங்கள்
தன் அழகிய கைகளில் ஆழி சங்கினைக் கொண்டவன், என் கொங்கைகள் அவனைத் தவிர வேறு சாதாரணமான மானிடனைப் பார்க்க மாட்டேன், என செந்நிற ஆடையைக் கண்டிக் கொண்டிருப்பதைப் பாருங்கள்.அவை கோவிந்தனுக்கு மட்டுமே வாய் புகும்.ஆகவே, என்னை இவ்விடத்திலிருந்து யமுனைக் கரையில் (அவனிடம்) சேர்த்து விடுங்கள்
(அவளது மார்பு செந்நிற ஆடை அணிந்து மற்ற மானிடர்களைக் காண வெட்கப்படுகிறதாம்.அவளது, முலைகளை மார்பின் கண்கள் என் கிறாள்.இப்படியெல்லாம் எழுதியுள்ளதால், இவற்றை எழுதியது ஆண்டாள் அல்ல என் கிறார்கள்.ஆனால், ஆண்டாள், பிடிவாதக்காரி, அழுத்தக்காரி, தன் முடிவில் உறுதியாய் நிற்பவள்..ஆகவெ அவள் இப்படி எழுதியதில் வியப்பில்லை எனலாம்)
அவன்முகத் தன்றி விழியேனென்று
செங்கச்சுக் கொண்டுகண்ணாடையார்த்துச்
சிறுமானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணிர்
கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை யொழியவேபோய்
யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்
அங்கைத் தலைத்திடை யாழிகொண்டான் - தமது அழகிய கைத்தலத்தில் சக்கரம் கொண்டவன்
அவன்முகத்தன்றி விழியேன் என்று - அவன் முகத்தைத் தவிர வேறு எதிலும் விழிக்க மாட்டேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண்ணாடையார்த்து- செந்திற ஆடையைக் கட்டிக் கொண்டு (மார்புக் கச்சை)
சிறுமானிடவரைக் காணில் நாணும் - (அந்தக் கண்ணனைத் தவிர) வேறு சிறு மானிடரை பார்க்கச் சகிக்காமல் வெட்கும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணிர்- என் கொங்கைகள் இருக்கும் இடத்தை நன் கு கவனியுங்கள்
கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா - கோவிந்தனுக்கு அல்லாமல் வேறு எவனுக்கும் உண்ணக் கொடுக்காது
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் - இவ்விடம் வாழ்வதை ஒழித்துப் போய்
யமுனைக் கரைகென்னை யுய்த்திடுமின் - யமுனைக் கரைக்குச் சென்று என்னை (அவனுடன்) சேர்த்து விடுங்கள்
தன் அழகிய கைகளில் ஆழி சங்கினைக் கொண்டவன், என் கொங்கைகள் அவனைத் தவிர வேறு சாதாரணமான மானிடனைப் பார்க்க மாட்டேன், என செந்நிற ஆடையைக் கண்டிக் கொண்டிருப்பதைப் பாருங்கள்.அவை கோவிந்தனுக்கு மட்டுமே வாய் புகும்.ஆகவே, என்னை இவ்விடத்திலிருந்து யமுனைக் கரையில் (அவனிடம்) சேர்த்து விடுங்கள்
(அவளது மார்பு செந்நிற ஆடை அணிந்து மற்ற மானிடர்களைக் காண வெட்கப்படுகிறதாம்.அவளது, முலைகளை மார்பின் கண்கள் என் கிறாள்.இப்படியெல்லாம் எழுதியுள்ளதால், இவற்றை எழுதியது ஆண்டாள் அல்ல என் கிறார்கள்.ஆனால், ஆண்டாள், பிடிவாதக்காரி, அழுத்தக்காரி, தன் முடிவில் உறுதியாய் நிற்பவள்..ஆகவெ அவள் இப்படி எழுதியதில் வியப்பில்லை எனலாம்)
No comments:
Post a Comment